Ninaivukal-2016-1aகனடாவில் நினைவுகள்.கொம் என்றால் நம் எல்லோர் மனங்களிலும் உடனே பதிவாகுவது அதன் அதிபர், ஸ்தாபகர் திரு.கனாவின் முகமே!!. இந்த நினைவுகள் அதிபர் திரு.கனா ஆறுமுகம் அவர்கள் நடாத்திய 2016ம் ஆண்டுக்குரிய “நினைவுகள் 2016” என்னும் அட்டகாசமான விழா கடந்த 20.02.2016 சனிக்கிழமை ஸ்காபுரோவில் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

முதலில் திரு. கணா ஆறுமுகம் அவர்களின் தாயார் தனது புனித பொற்கரங்களால் மங்கள விளக்கினை ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து குடும்ப அங்கத்தினர்கள் விளக்கேற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கனேடிய தேசிய கீதம், தமிழ்த் தாய் வாழ்த்து, ஒரு நிமிட மௌன அஞ்சலிக்குப் பின் வயலினுடன் சேர்ந்த வீணைக் கச்சேரியும், பரத நாட்டியம், நான்கு இசைக் குழுக்களுக்கிடையிலான போட்டியும் இடம்பெற்றது. இதில் இறுதிச் சுற்றில் பங்கு பற்றி,

1. Isai Muthukal – Mayurathi’s Team முதலாவது,Ninaivukal-2016-1b
2. Treble makers – Jathavi’s Team இரண்டாவது,
3. Isai Alaigal – Tharmira’s Team மூன்றாவது,
4. Isai Warriors – Emily’s Team நான்காவது இடத்தையும் பெற்றனர்.

விஜய் தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் புகழ் பிரவீன் அவர்களுடன் கனடா வாழ் ஈழத் தமிழரான ஜெசிக்கா அவர்களும் இணைந்து ஒரு அருமையான பாடலை வழங்கியிருந்தனர். தொடர்ந்து திரு. கணா ஆறுமுகம் அவர்களின் “நினைவுகள்” பிரதி வெளியிட்டு வைக்கப்பட்டது. அத்துடன் அனுசரணையாளர்களைக் கௌரவிக்குமுகமாக அவர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. நினைவுகள் பிரதியின் முகப்பு அட்டையினை அலங்கரித்த ஐஸ்வரியா சந்துரு அவர்கள் பிரவினுடன் இணைந்து அருமையான பாடல் ஒன்றினை வழங்கினார்கள். எமது மண்ணின் நடனக் கலைஞன் அடுத்த பிரபுதேவா புகழ் பிறேம் கோபால் அவர்கள் தனது மனைவியுடன் இணைந்து நடனமாடி எமது மனதைக் கவர்ந்தனர். இனிய இராப்போசன விருந்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுக்கு வந்தது.