Lady-judje-1aகனடாவில் நீண்டகாலமாக வழக்கறிஞராக பதவி வகித்த தெய்வா மோகன் ஒன்ராரியோவில் நீதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டார். இதன்மூலம் தமிழர் ஒருவர் முதல் முதலாக ஒன்ராரியோ நீதிபதியான பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.

சாவகச்சேரியினை பிறப்பிடமாகக் கொண்ட தெய்வா, கரம்பொனைச் சேர்ந்த காலஞ்சென்ற அரசியல்வாதியும், தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும், முன்னாள் ஊர்காவற்றுறை நாடாளுமன்ற உறுப்பினருமான நவரத்தினம் அவர்களின் மகன் ஜெகன்மோகனின் மனைவியாவார்.

இதில் ஒரு முக்கியமான விடையம் என்னவென்றால் காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வி. நவரட்னம் அவர்கள் ஒரு சட்டத்தரணி, அவரது புதல்வர் ஜெகன் மோகன் ஒரு சட்டத்தரணி, ஜெகன் மோகனின் மனைவியான, தற்போதைய நீதிபதியும் ஒரு முன்னாள் சட்டத்தரணி, இந்த தம்பதியினரின் ஒரே புதல்வரும் ஒரு சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.உள்ளனர். 

இவரின் சேவை மென் மேலும் சிறப்பாக அமைய கரம்பொன் நெட் இணையத்தளம் சார்பில் வாழ்த்துக்கைளை தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகிறோம்.

Lady-judje-