Nattiya Kalakshetra1aகனடாவில் கடந்த பல ஆண்டுளாக வெற்றிகரமாக இயங்கிவரும் நாட்டிய கலா சேஸ்த்திரா நடனப் பள்ளியின் 17வது ஆண்டுவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ சீனக் கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மாகாண பாராளுமன்ற உறுப்பினர் திரு லோகன் கணபதி உட்பட பல விருந்தினர்கள் கலந்து சிறப்பித்த இந்த ஆண்டு விழாவில் நடனப் பள்ளியின் நிறுவனரும் குருவுமாகிய ஸ்ரீமதி தேனுஜா திருமாறனை அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவித்தார்கள்.

அங்கு நடைபெற்ற அனைத்து நடனங்களும் பார்வையாளர்கள் கண்களைக் கவர்ந்து நின்று கரகோசங்களைப் பரிசாகப் பெற்றன. திருமதி சில்வியா பிரான்சிஸ் சிறப்பான முறையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.