Tamil Fest-2020-1aaaaகனடியத் தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடங்களாக கோலாகலமாக நடாத்தப்பட்டு வந்த 'தமிழர் தெரு விழா' நிகழ்வு இவ்வாண்டு கோவிட்19 நோய்த் தொற்றினைத் தவிர்க்குமுகமாக இம்முறை இணையம் வழியாக கொண்டாடப்பட்டது. கனடியத் தமிழர் பேரவையானது உலகம் முழுவதுமுள்ள பார்வையாளர்களை  பல்வேறு நாட்டுக் கலைஞர்களுடன் இணைத்து புதுமையானதொரு முறையில்  'தெருவிழா 2020' கொண்டாட்டத்தை உங்கள் வீட்டிற்குள்ளேயே பார்த்து மகிழும் வண்ணம் அமைத்திருந்தார்கள்.

இதற்கமைய ' தமிழர் தெரு விழா 2020' இரண்டு நாள் நிகழ்வாக நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வு சனிக்கிழமை ஒகஸ்ட் 29ஆம் திகதி (29-08-2020) காலை 10:30 மணிக்கு இணையத்தில் தொடங்கி வைக்கப்பட்டு அதன்பின், பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பிற்பகல்  2:30 வரை   நேரடி ஒளிபரப்பாக இணையத்தில் கொண்டுவரப்பட்டது. அதேபோல இரண்டாம் நாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக் கிழமை 30-08-2020 காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 2:30வரை தொடர்ந்து நடைபெற்றது. பல்வேறு கலைநிகழ்ச்சிகளை  நேரடியாக கனடா, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் இணையம் வழியாகக் கண்டுகளித்தார்கள்.