mathavan1அன்றாடத் தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது கூகுள் நிறுவனம். தேடி பொறியாக இருக்குக் கூகுளை பயன்படுத்தாதவர்கள் இல்லை என்கிற அளவிற்கு ஒட்டுமொத்த உலக மக்களையும் தன்னகத்தை வைத்திருக்கிறது.

யாழ் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் நித்தியானந்தன் மாதவன் சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட Google Code-In 2019 போட்டியில் Grand Prize Winner பட்டத்தை வென்றுள்ளார்.

இவருக்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் ஜூன் மாதம் கலிபோர்னியாவில் உள்ள Google தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

சிறப்பு விருதினை பெற்றுக் கொண்ட ஈழத்தமிழ் மகன்  நித்தியானந்தன் மாதவனுக்கு  மனமார்ந்த வாழ்த்துகள்!…

நன்றி: ஐபிசி நியூஸ்