Thurairajah1கனடாவில் பலவேறு துறைகளில் முன்னின்று உழைத்து வரும் பிரபல சமூக சேவையாளர் திரு வி. எஸ். துரைராஜா அவர்கள் சமூக சேவையில் ஈடுபடத் தொடங்கி 50 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு அவரது நண்பர்கள் பலர் சேர்ந்து நடத்திய சேவைப்பாராட்டு விழா 11-08-2014 சனிக்கிழமை மாலை கனடா ஸ்ரீ ஐய்யப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
டாக்டர் வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற மேற்படி அற்புதமான விழாவில் பல கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌ;ரவ ஜிம் கரிஜியானிஸ், அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த திரு நடராஜா (முன்னாள் பனை அபிவிருத்திச் சபை தலைவர்) உட்பட பலர் உரையாற்றினார்கள்.
ஏராளமான மக்கள் இந்நிகழ்வில் திரளாகக் கலந்து கொண்டனர்.
திரு வி. எஸ். துரைராஜா யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி நுணாவில் கிராமத்தில் கிராம சேவை அதிகாரியாக பணியாற்றியவர் என்பதும், அங்கு அறவழிப் போராட்டக் குழுவின் தலைவராக இருந்தவர் என்பதும் இங்கு குறிப்பித்தக்கது.
கனடாவில் தமிழ் கலைக் கல்லூரி, மறுவாழ்வு அமைப்பு ஆகிய அமைப்புகளில் முக்கிய பதவிகள் வகிப்பவர் என்பதும் கவனிக்கத்தக்கது.