ஆஞ்சநேயரின் வாரதினமான சனிக்கிழமையுடன் கூடிய ஹனுமான் ஜயந்தியும் அத்துடன் சேர்ந்த சித்திரை பௌர்ணமி தினமான இன்று கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில்ஸ்ரீசுயம்பு ஆஞ்சநேயருக்கு செந்தூரம் இட்டு , 108 வடை மாலை, வெற்றிலை மாலை, அவரின் வாலைச்சுற்றி துளசி மாலை அணிவித்தும், நாற்பது புகழ்மாலை (ஹனுமான் சலிசா) பாடி, 108 போற்றிகளுடன் பூசை வழிபாடும் சிறப்பாக நடைபெற்றன.ஸ்ரீபொன்சாயிக்கு ஆராத்தியுடன் உழுந்துப் பிரியன் ஹனுமானின் இட்டலியும் பிரசாதமாக அடியவர்களுக்கு வழங்கப்பெற்றென.