தமிழ்ப் பேரறிஞர் தனிநாயகம் அடிகளார்

thaninayakam1ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர். தமிழ், ஆங்கிலம் தவிர எசுப்பானியம், உரோம மொழி, போர்த்துகீசியம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் கூடியவரும், பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்து வெளிக் கொணர்ந்தவர் தனிநாயகம் அடிகளார்.

தனிநாயகம் அடிகளாரின் பெயரைக் கேட்கின்றபோதெல்லாம் நமக்கு நினைவில் வருவது தமிழ்க்கலாசாரம் என்னும் முத்திங்கள் ஏடும் 1968ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடுமே என்பதில் ஐயமில்லை.


தவத்திரு மகாதேவ சுவாமிகள்

mahadevaஈழத்தில் தமிழும், சைவமும் தழைத்தோங்க ஆன்மீகக் குருபரம்பரையொன்று தொடர்ந்து வந்த வண்ணமே இருக்கிறது. சான்றோர்கள் காலத்துக்குக் காலம் அவதரித்து தமிழ்ப்பணியும், சைவப் பணியும் புரிந்து வந்தமையால் சமய அறிவும், தமிழ் அறிவும் வளர்ச்சி பெற்று வந்துள்ளன. அவ்வழியில் வந்தவர்களுள் ஒருவர் ஊர்காவற்றுறை கரம்பொன் ஊரில் அவதரித்த தவத்திரு மகாதேவா சுவாமிகள் ஆவார்.


தொழிலதிபர், முன்னாள் காவலூர் நாடாளுமன்ற உறுப்பினர்- அல்பிரட் லியோ சவரிமுத்து தம்பையா

Alfred Thambiahஅல்பிரட் லியோ சவரிமுத்து தம்பையா 
இலங்கைத் தமிழ் தொழிலதிபரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

தம்பையா 1903 நவம்பர் 8 அன்று இலங்கையின் வடக்கே ஊர்காவற்துறை, கரம்பொன்என்ற ஊரில் பிலுப்புபிள்ளை தம்பையா, ரோசமுத்து ஆகியோருக்குப் பிறந்தார்.இவரது தந்தை ஊர்காவற்துறையில் கப்பல் சொந்தக்காரராக இருந்தவர்.


முன்னாள் காவலூர் பாராளுமன்ற உறுப்பினர்: வி. நவரத்தினம்

navam1வி. நவரத்தினம் (அக்டோபர் 18, 1910 – டிசம்பர் 22, 2006) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாளி, இலத்தீன், சிங்களம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற ஒரு மொழியியலாளர்.
வாழ்க்கைக் குறிப்பு: யாழ்ப்பாணம் லைடன் தீவில் கரம்பனில் வைத்தியநாதன் தம்பதிகளுக்குப் பிறந்த நவரத்தினம், இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டக்கல்வி பயின்று 58 ஆண்டுகாலம் சட்டத்தரணியாகப் பணியாற்றினார்.
தமிழரசுக்கட்சியில் இணைதல்: 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பதிவுச் சட்டத்தை எதிர்த்ததால் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய தந்தை செல்வநாயகத்துடன் இணைந்து 1947 டிசம்பர் 17 இல் தமிழரசுக் கட்சி உருவாகுவதற்கு தோள் கொடுத்தவர் நவரத்தினம். அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர்.


ஒலிபரப்புக்கலை ஆசான் சோ.சிவபாதசுந்தரம்

sivapatham1ஈழத்தில் யாழ்ப்பாண மாவட்டம்,  ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற கிராமத்தில் சோமு உடையார் பேரன் என்றழைக்கப்பட்ட சோமசுந்தரம்பிள்ளை என்பவருக்கு 1912 ஆம் ஆண்டில் பிறந்தவர் சிவபாதசுந்தரம். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஆங்கிலம், தமிழ், மற்றும் சமக்கிருந்தம் போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்ற இவர் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்தார். 1930களில் குரும்பசிட்டி பொன்னையாவால் ஆரம்பிக்கப்பட்ட ஈழகேசரி பத்திரிகையில் ஆசிரியரானார். ஐந்தாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் 1941 ஆம் ஆண்டளவில் கொழும்பு வானொலியில் பணியில் சேர்ந்தார்.


கலைஞர் காவலூர் ராஜதுரை

Kavaloor- Rasaஇலங்கை முற்போக்கு எழுதத்தாளர் சங்கத்தின் முன்னணி அங்கத்தினராக நீண்ட காலம் இருந்தவர்
காவலூர் ராஜதுரை அவர்கள். யாழப்புhணத்தில் ஊர்காவற்றுறையில் கரம்பொன் என்னும் கிராமத்தில் 1931 ஐப்பசி 13ம் திகதி பிறந்தவர் (13.10.1931). ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்றவர். சிரேஷ்ட தராதரம் பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்த பின் இலங்கை மத்திய வங்கி அரச உணவுக்கூட்டுத்தாபனம் இலங்கை ஷெல் கம்பெனியின் பிரச்சாரப் பிரிவின் தமிழ்ப் பகுதி ஆகியவற்றில் எழுதுவினைஞராகப் பணியாற்றியவர்.