ஆசை வெட்கமறியாதோ..? Valentine Story

(நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள்.

ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது,
மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது.
சரியா பிழையா தெரியவில்லை. )

ழுபது கிலே மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள். இப்படியான முகஅலங்காரங்களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் செய்வது வழக்கம். 


தாயாய்., தாதியாய்..! – (குரு அரவிந்தன்)

thayai(அம்மா, சமூகத்திற்குச் சேவை செய்யத்தான் வேண்டும், ஆனால் எங்களுக்கு நீதான் வேண்டும் – மகளின் ஓலம் அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன.)

‘அம்மா, நீயும் எங்களோட நிற்கிறியா..?’ அருகே படுத்து இருந்த ஆறு வயது கடைசிப் பெண் சங்கீதா கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டாள்.

‘நிற்கலாம், ஆனால் கட்டாயம் வேலைக்குப் போகணுமே, நீ சமத்தாய் தூங்கு. அக்கா பார்த்துக் கொள்ளுவா’

அவளுக்கு ஆறுதல் சொல்லி, தட்டிக் கொடுத்து அணைத்து தூங்க வைத்தாள். பக்கத்துக் கட்டிலில் இரண்டாவது மகள் சுகன்யா எந்தவித கவலையும் இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்தாள்.

நேரத்தைப் பார்த்துவிட்டு வேலைக்குப் போவதற்காக அவசரமாக எழுந்து உடை மாற்றினாள். யாரோ அவளை அவதானிப்பது போல அவளது உணர்வு சொல்லிற்று. திரும்பிப் பார்த்தாள்.


சிறுகதை – ரோசக்காரி – குரு அரவிந்தன்

Story- Rosakari-10-2020சுபத்ரா காலையில் எழுந்து குளித்து உடைமாற்றித் தலைவாரி சின்னதாகக் கூந்தலைப் பின்னிக் கொண்டாள். கண்ணாடியைப் பார்த்துப் பொட்டு வைத்துக் கொண்டாள். பெட்டியைத் திறந்து ‘சார்டிபிகேட்’ எல்லாவற்றையும் எடுத்து கவரில் வைத்தாள்.

‘நான் போறேன்…!’ என்றாள் மொட்டையாக.


சிறுகதை – தங்கையின் அழகிய சினேகிதி – குரு அரவிந்தன்

thumbnail_Thinakural- Sister's friend-2020.வன் உள்ளே வரும்போது ஹாலில் அவள் தனியே டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள்.

யார் இந்தப் பெண்? தங்கையின் சினேகிதியாக இருக்குமோ?

அவன் அவளைக் கவனிக்காதது போலக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவளைக் கடந்து தனது அறைக்குச் சென்றான்.

தங்கைக்கு இப்படி ஒரு அழகான சினேகிதி இருப்பது கூட அவனுக்கு இதுவரை தெரியாமற் போச்சே என்று வருத்தப்பட்டான்.


மனம் விரும்பவில்லை சகியே! – காதலர்தினக்கதை (குரு அரவிந்தன்)

Story-Valentine-2019-.நான் கன்னத்தைத் தடவிப் பார்த்தேன்.

‘ஏன் வலிக்கவில்லை?’

‘என்கிட்ட வேண்டாம்’ என்பது போல் அவள் என்னை முறைத்தபடி நகர்ந்தாள். நல்ல காலம் கன்னத்தில் அறையவில்லை. அவள் என்னைப் பார்த்த பார்வை கன்னத்தில் அறைந்தது போல இருந்தாலும் ஏனோ எனக்கு அது வலிக்காத ஒருவித சுகத்தைத் தந்தது.

நான் என்னை மறந்து அவளைப் பார்த்தபடியே நின்றதை அவள் கவனித்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த முறைப்போ என்று நினைத்தேன். நாகரிகம் கருதி நான் அவளை அப்படி வைத்தகண் வாங்காது ஒரேயடியாகப் பார்த்திருக்கக்கூடாது என என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். ஆனாலும் என்ன செய்வது, பொம்மைகளுக்கு நடுவே பொம்மைபோல நின்ற, பிரமிக்கத்தக்க அவளது அழகுதான் என்னை அப்படி வெறித்துப் பார்க்க வைத்தது.


கண்களின் வார்த்தை புரியாதோ..? – குரு அரவிந்தன்

Valentineகாதலர்தினக் கதை

அவளுடைய அந்தச் சிரிப்பில் ஏதோ ஒரு வித கவர்ச்சி இருந்ததென்னவோ உண்மைதான், ஆனால் அது என்னை ஒரு கணம் நிலை குலைய வைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் என்னை மறந்து அவளைப் பார்த்தேன். அவளோ ஒரு கண்ணசைவோடு என்னைக் கடந்து மெதுவாகச் சென்றாள். அதுவே எனக்குள் ஏதோ நுழைந்து விட்ட உணர்வை ஏற்படுத்தி என்னைக் குளிரவைத்தது. அவள் என்னை அசட்டை செய்தாளா அல்லது என்னை ஏங்க வைத்தாளா என்பது அப்போது எனக்குப் புரியவில்லை.


நங்கூரி – உண்மைச் சம்பவம் – (குரு அரவிந்தன் – கனடா)

' என்னைக் கட்டிப்போட்டிட்டு என் கண்    முன்னாலேயே…’

இயலாமையின் விசும்பும் ஓசை மட்டும் மெதுவாய்க் கேட்டது. 

அது கொழும்பு துறைமுகம்…

ஒவ்வொருவராக வரிசையில் நின்று உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம். எங்களுக்காக துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலின் படிகளில் ஏறும்போது நங்கூரி என்ற பெயர் பெரிதாக அந்தக் கப்பலில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருந்ததை அவதானித்தேன். 1983ம் ஆண்டு யூலை மாதம் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவில் இருந்து நல்லெண்ண விஜயத்தில் வந்திருந்தது.


தாழ்பாள்களின் அவசியம் – அ.முத்துலிங்கம்

அம்மாவுக்கு கனடாவில் நம்பமுடியாத பல விசயங்கள் இருந்தன. அதில் மிகப் பிரதானமானது   வீடுகளில் பூட்டு என்ற பொருளுக்கு வேலை இல்லாதது. அம்மாவின் கொழும்பு வீட்டில் அலமாரிக்கு பூட்டு இருந்தது. தைலாப்பெட்டிக்கு பூட்டு இருந்தது. மேசை லாச்சிக்கு பூட்டு இருந்தது. பெட்டகத்துக்கு பூட்டு. வாசல் கதவுக்கு பூட்டு. கேட்டிலே பெரிய ஆமைப்பூட்டு. இப்படியாக பூட்டு மயம்.


முதல் ஆச்சரியம் – அ.முத்துலிங்கம்

ஆப்பிரிக்காவில் எனக்கு ஏற்பட்ட முதல் ஆச்சரியத்தைப் பற்றி சொல்லலாம் என நினைக்கிறேன். இத்தனை வருடங்கள் கழிந்த பின்னரும் அது நினைவிலிருந்து மறைய மறுக்கிறது. சமீபத்தில் அந்த நினைவு வந்தபோது ஏன் இதை எழுதவில்லை என்று யோசித்தேன். ஒருவரும் நம்பமாட்டார்கள் என்பதால் எழுதாமல் விட்டேனோ தெரியவில்லை. அல்லது 2013ம் ஆண்டு பிறந்த பின்னர் எழுதும் முதல் எழுத்தாக இது இருக்கவேண்டும் என்று விதி தீர்மானித்ததால்  இருக்கலாம். என்னவோ, இப்போது சொல்லலாம் என்று தோன்றுகிறது.


ஒன்றைக் கடன்வாங்கு – அ.முத்துலிங்கம்

ஓட்டு வளையத்தை தொட்டுக் கொண்டிருந்தால் கார் தானாகவே ஓடும் என்று நினைக்கும் வயது எனக்கு. எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். ஓர் ஐஸ்கிரீமுக்காக உலகத்தில் எதையும் செய்வேன். ஒரு வட்டக் கிளாஸில் ஐஸ்கிரீமை நிரப்பி அதற்குமேல் மென்சிவப்பு பழம் ஒன்றை வைத்து தரும்போது அலங்காரமாக இருக்கும்; ருசியும் அதிகமாகும். பொய்யும் அப்படித்தான். அதைச் சொல்லும்போது உண்மைத் துளி ஒன்றையும் கலந்துவிட வேண்டும். சிறந்தபொய் அப்படித்தான் உண்டாக்கப்படுகிறது. இந்த உண்மை எனக்கு நாலு வயதிலேயே தெரிந்துவிட்டது. ஒரு பொய் சொல்வதில் ஏற்படும் திரில்லும், வேடிக்கையும், விளையாட்டும் மகிழ்ச்சியும் எனக்கு வேறு எதிலும் கிடைப்பதில்லை.