வெளியில் எல்லாம் பேசலாம் -அகில்

நாட்டு நிலைமை காரணமாக சோபை இழந்து காணப்பட்ட இலக்கிய விழாக்களும், நூல் வெளியீடுகளும் மீண்டும் களைகட்டத் தொடங்கியிருந்தன. இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருந்த சிறுகதை ஒன்றில் மூழ்கியிருந்த என்னை மனைவியின் குரல் உலுக்கியது.

“என்னப்பா இருக்குறீங்க. நூல் வெளியீட்டுக்குப் போகவேணும் எண்டனீங்கள்….. என்ன வெளிக்கிட இல்லையோ?” 

“மறந்தே போயிட்டனப்பா. நல்ல காலம் ஞாபகப்படுத்தினீர்” என்றபடி சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன்.


நீயே எந்தன் புவனம் (குரு அரவிந்தன்)

காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் தேவையில்லைத்தான்,ஆனால் என்னவளுக்கு என் மனதில் உள்ளதை ஏதாவது முறையில் புரிய வைக்க வேண்டுமே! ரொரன்ரோ ஈற்ரன் சென்ரரில் ரொம்பவும் பிஸியான அந்தப் புத்தகசாலையில் ''வேலன்டையின்" கார்ட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். விதம் விதமான வர்ணங்களில் அவை ,இருந்தாலும் எனக்குப் பிடித்தமான, பொருத்தமான வார்த்தைகள் அடங்கிய கார்டைத் தேடிக்கொண்டிருந்தேன்.


ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்! (குரு அரவிந்தன் – கனடா)

இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு நன்கு பழக்கப்பட்ட கையெழுத்தில் முகவரி எழுதப்பட்டிருந்தது. ஊட்டி கான்வென்ட் ஹாஸ்டலிலிருந்டது எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தைத்தான் முதலில் பிரித்துப் படித்தார்.
'அன்புள்ள அப்பா" 


புல்லுக்கு இறைத்த நீர்..! (குரு அரவிந்தன் – கனடா)

தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது. 
எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும் தர்மசங்கட நிலை ஏற்படும்போது சிலர் தெரியாதமாதிரி, கண்டும் காணாததுபோல முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு மெல்ல நழுவி விடுவதும் உண்டு. சிலர் வேறு வழியில்லாமல் ''சார் எப்படி இருக்கிறீங்க, சௌக்கியமா..?'' என்று பட்டும் படாமலும் குசலம் விசாரித்து விட்டு விலகிச் செல்வதும் உண்டு. இன்னும் சிலர் உண்மையாகவே குரு பக்தியோடு, நலம் விசாரிப்பதில் அக்கறையோடு நின்று நிதானமாக பேசுவதும் உண்டு.


சுமை.. (குரு அரவிந்தன் – கனடா)

(கனடியத் தமிழ் வானொலி (CTR) சர்வதேசரீதியாக நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற சிறுகதை இது.)

இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப்போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப்பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக்கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி வரும் கனமான பூட்ஸின் அதிர்வுகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான எதிர்பார்ப்பில், இதயம் ஏனோ வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. மிக அருகே அதிர்வுகள் நிசப்தமாகிப் போனதால், பயத்தில் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள, தூங்குவது போலப் பாசாங்கு செய்ய முனைந்தான்.


தவறுகள் திருத்தப்படலாம்…(திருமதி வாலாம்பிகை சுப்பிரமணியம்)

அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு ப+ஜையை முடித்துக் கொண்டு கஸ்தூரி சமையறைக்கு வந்தாள் ஏற்கனவே சமையற் காரம்மா தயாரித்து வைத்திருந்த உணவு வகைகளை சாப்பாட்டு மேஜையில் வைத்து ஒழுங்கு படுத்தவும் அவள் கணவர் மூர்த்தி “கோர்ட்டுக்கு” போக ஆயத்தமாகி வரவும் சரியாக இருந்தது எப்போதுமே காலை உணவு வேளை மூர்த்திக்கு மகிழ்ச்சியாக ஆரம்பிக்கும். ஆரம்பிக்கவேண்டும். மங்களகரமான முகத்தில் குங்குமத் திலகத்துடன் வசீகரமான புன்னகையுடன் வளையல் குலுங்கும் கரத்தால் மனைவி பரிமாற அதை ரதிச்து புசிக்கும் அந்த காலை உணவு அவரது அந்த நாள் முழுவதுக்குமான புத்துணர்வை அவருக்கு வழங்குவதுண்டு. அன்றும் மனைவியுடன் இனிமையாக அளவளவாடியபடி சாப்பிடத் தொடங்கினார். அந்த நேரத்தில் வாசலில் கேட்ட குரல் கஸ்தூரியை வாசலை நோக்கி விரைய வைத்தது.


உன் கண்ணில் நீர் வழிந்தால.. (பிறேமலதா – கரம்பொன்)

சுட்டெரிக்கும் சூரியனின் வெம்மை தாளாமல் காற்றுக்கூட அசையமறுத்து நிற்கும் நிசப்தம் நிரம்பிய மதியப்பொழுது தகதகவென எரியும் மேனியில் கசகசத்து வழியும் வியர்வையினைத்   துடைக்கத் திராணியற்று எப்பவும் போல தனிமையின் துயரம் தொண்டையை அடைக்க கண்களை மூடியபடி கடுந்தவம் புரிந்தது அந்த அடிக்கல்(அத்திவாரக்கல்). அதன் தவத்தைக் கலைப்பது போல இடுப்பு மூட்டை யாரோ முட்டித்தள்ள “நேற்று பக்கவாட்டாய் இடித்ததில் விலா எலும்புகள் ஒருபக்கம் விலத்தி அதன் வேதனை இன்னும் தீரவில்லை இன்று இடுப்பில் பதம் பார்க்கின்றாளே இவளை இப்படியே விட்டு வைத்தால் இருந்த இடம் தெரியாமல் பண்ணி விடுவாள்..” சினத்துடன் சீறிப்பாயவென விழித்த கண்கள் வியப்பில் ஆழ்ந்தன.


தொடர்ந்து வரும் வலிகள்… (காவலூர் வரதன்)

உடலை உறைய வைக்கும் குளிர்காற்று குப்பென்று, திறக்கப்பட்ட காரின் கண்ணாடி ஜன்னல் வழியாக முகத்தில் அறைந்ததைக் கூட பொருட்படுத்தாமல் மாலா கனடாவின் 401 பெருந்தெருவில் காரை லாவகமாக ஓட்டிக் கொண்டு இருந்தாள். அவள் எதையும் பொருட்படுத்தியாகத் தெரியவில்லை கண்கள் தெறித்து விழும் அளவு குளிர் உடலில் பட்டது கூடத் தெரியாமல் இல்லை இல்லை பட்ட உணர்வு கூட இல்லாமல் அவள் சிந்தனை எங்கோ சிறகடித்துக் கொண்டு இருந்தது. அவள் மனம் காரைவிட, குளிர் காற்றைவிட வெகு வேகமாகப் பறந்து பறந்து சிந்தனையில் ஆழ்ந்து வேதனை உணர்வுகளால் குழம்பி இருந்தது, ஆனால் அவள் காரை ஓட்டிச் சென்ற விதம் அவளின் மன உறுதிக்கும் அவள் பட்ட அனுபவத்திற்கும் சான்று வழங்குவது போல் கட்டியம் கூறியது


சுமைதாங்கி

காலனின் தூதுவன்போல் ஒரு போலீஸ்Šகாரன் அந்தக் காலனிக்குள் வந்து ஒவ்வொரு வீடாகக்
கேட்டான். கேட்டான்… கேட்டானா?… அவன் தன் நெஞ்சும் உடலும் பதைபதைக்க ஒவ்வொரு
வீட்டின் முன்பும் நின்று, "அம்மா! உங்க வீட்டிலே ஏதாவது கொழந்தை, ஆம்பளைக் கொழந்தை,
பத்து வயசு இருக்கும், காக்கி நிசாரும் வெள்ளைச் சட்டையும் போட்டுக்கிட்டு… உண்டுங்களா?"
என்று திணறினான் போலீஸ்காரன்.


மணி பர்ஸ்…

மகா குளிரான ஒரு தினம். நான் வீடு திரும்புகிற வழியில் காலில் தட்டியது ஒரு மணிபர்ஸ். யாரோ தெருவில் தவறுதலாக தொலைத்திருக்கிறார்கள். கையில் எடுத்து விரித்துப் பார்த்தேன். அதன் சொந்தக்காரர் பற்றி எதும் துப்பு கிடைக்கலாம். ஆனால் அதில் வெறும் மூணு டாலர்கள் மாத்திரமே இருந்தன. கூட ஒரு கசங்கிய கடிதம். பல வருடங்களாக அது பர்சிலேயே இருந்திருக்கும் என்று பட்டது. கடித உறை கந்தலாகியிருந்தது. அனுப்பியவர் முகவரி தவிர வேறெதுவும் அதில் கண்டுகொள்ள முடியவில்லை. கடிதத்தைப் பிரித்தேன். அதில் எதும் அடையாளம் சிக்கினால் நல்லது. எழுதப்பட்ட தேதி… 1924. ஏறத்தாழ அறுபது வருஷம் முன்னால்!