மரண அறிவித்தல்- திருமதி. புஸ்பமணி சிற்றம்பலம்


அன்னையின் மடியில் 14-04-1929
ஆண்டவன் அடியில் 01-12-2023

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பமணி சிற்றம்பலம்; அவர்கள் 01-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வியாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தவள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயலக்ஸ்மி, சண்முகராஜா, ஜெயலக்ஸ்மி, ஆகியோரின் பாசமிகு தாயாரும்,


கரம்பொன் அருள்மிகு சீரடி சாய்பாபா ஆலய விசேஷ பூஜைகள்

கரம்பொன் சுருவில் வீதியில் ஸ்ரீ பொன் சாயியாக வீற்றிருக்கும் சீரடி சாயி ஆலயத்தின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றி லண்டனில் வசித்து வரும் திருமதி. கமலா பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆலயத்திற்கு சென்று ஆலயத்தின் மகிமை பற்றி விபரமாக உரையாற்றினார். இன்று கரம்பொன் சீரடி சாயி இல்லத்திலே ஸ்ரீ பொன்சாயி தொண்டர்களின் சேவையானது மிகவும் சிறப்பான ஒன்றாக அமைகிறது.


‘விலா கருணா’ மூத்தோர் இல்லம் நடத்திய ‘சந்தியாராகம்’ சுப்பர் சிங்கர் போட்டி நிகழ்ச்சி

கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவருபவதுடன் தமிழ் பேசும் மூத்தவர்களின் உடல் நலம் குன்றிய நாட்களில் அவர்களைப் பராமரிக்கும் அற்புதமான மனித நேயப் பணியை மேற்கொண்டு வரும் திருமதி இந்திராணியின் ‘விலா கருணா’ மூத்தோர் இல்லம் நடத்திய ‘சந்தியாராகம்’ சுப்பர் சிங்கர் போட்டி நிகழ்ச்சி கடந்த 16ம் திகதி சனிக்கிழமை ஒன்றாரியோ இசைக் கலா மன்றத்தின் கலா மண்டபத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


கரம்பொன் சீரடி சாயி பாபா கோவிலில் பாபா சிலை பிரதிஷ்டை (குடமுழுக்கு விழா-10-09-2023)

கரம்பொன் சுருவில் வீதியில் ஸ்ரீ பொன் சாயியாக வீற்றிருக்கும் சீரடி சாயி பாபாவிற்கு ஸ்வஸ்தி ஸ்ரீ நிகழும் மங்களகரமான சோபகிருது வருஷம் ஆவணித் திங்கள் 24ம் நாள் (10-09-2023) ஞாயிற்றுக்கிழமை புனர்பூச நட்சத்திரமும் ஏகாதசி திதியும் சித்த யோகமும் கூடிய சுபதினத்தில் காலை 8.32 மணிமுதல் 10.36 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற்றது. மீண்டும் எங்கள் ஊர் பொன்னாக மிளிர ஸ்ரீ பொன்சாயியைப் போற்றுவோமாக!.


திரு& திருமதி தர்மசோதி, ஷீலா தம்பதிகளின் மகவுகளாகிய அண்ணன், தங்கை, ஹரிகரன், ஹரிணி இரட்டையர்களின் நாட்டிய அரங்கேற்றம்.

நிமிடத்துக்கு நிமிடம்,வியர்வைத் துளிகளை வழித்தெறியத் தேவையற்ற,குளிருக்கான ஆடைகள் எவற்றினும் தேவைகளற்ற, ஒரு கச்சிதமான காலநிலை.பூமி விரைவாகச் சூடாகி, உலகம் முழுவதுமே குழப்பமான காலநிலையை எதிர்கொள்கின்ற இந்தக் காலகட்டத்தில் , கனடா போன்ற ஒரு நாட்டில் இத்தகையதான நாட்கள் கிடைப்பதென்பது மிக அரிது.

அத்தகையதொரு கச்சிதமான காலநிலையைக் கொண்டிருந்த நாளில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களாக உறவுகளும் நண்பர்களும் ஒன்று கூடினோம். இடம்: ஸ்கார்புரோ சீனக் கலாச்சார மண்டபம் நாள்: ஆவணி 19,2023


இன்று 14-08-2023 ஊர்காவற்றுறை கரம்பொன் மேற்கு அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி ஆலய இரத உற்சவம்!

மேலைக்கரம்பொன் பதியில் வேண்டும் வரங்களை வாரிவழங்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகமூர்த்தி சுவாமியின் வருடாந்த மகோற்சவம் மங்களகரமான சுபகிருது வருஷம் ஆடி மாதம் 21ம் நாள் (06-08-2023) ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துத் தினங்கள் நடைபெற்று, 11ம் நாள் (14-08-2023) திங்கட்கிழமை தேர்த்திருவிழாவும் 12ம் நாள் (15-08-2023) செவ்வாய்க்கிழமை எம்பெருமானுக்குத் தீர்த்த உற்சவமும் நடைபெறுகிறது. இவ் உற்சவ காலங்களில் அடியார்கள் விரதம் அனுஷ்டித்து ஆசார சீலராய் ஆலயத்திற்கு வருகை தந்து ஸ்ரீ முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுச் செல்கின்றனர்!


கனடா ஓபன் பாட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றார் லக்‌ஷயா சென்

கனடா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.

கனடாவின் கல்கரி நகரில் நடைபெற்று வந்த இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு 19-ம் நிலை வீரரான இந்தியாவின் லக்‌ஷயா சென், ஆல் இங்கிலாந்து சாம்பியனும் 10-ம் நிலை வீரருமான சீனாவின் லி ஷி பெங்குடன் மோதினார். இதில் 21 வயதான லக்‌ஷயா சென் 21-18, 22-20 என்ற நேர் செட்டில்வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.


நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா தற்போது நடைபெற்றுக்கெண்டிருக்கின்றது. தொடர்ந்து பதினாறு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில், இன்றைய தினம்(02.07.2023) ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது.


கனடாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 இலக்கிய விருதுகள் வழங்கும் விழா

கனடாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 இலக்கிய விருதுகள் வழங்கும் விழா கடந்த 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள “The Estate Banquet Hall” மண்டபத்தில் நடைபெற்றது. ‘தமிழ் இலக்கியத் தோட்ட’த்தின் 2022 இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவில் மேற்படி ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்னும் நூலை எழுதியமைக்காக ‘இந்திய இலக்கிய தரிசன விருது’ என்னும் உயரிய கௌரவத்தை எழுத்தாளர் சிவசங்கரி அவர்களும். இலக்கியச் சாதனைக்கான விசேட விருதை கனடா வாழ் வி. என். கிரிதரனும் பெற்றுக் கொண்டனர்.


கனடாவில் கலாநிதி வே. இலகுப்பிள்ளை அவர்களின் ‘அணுவைத் துளைத்து’ நூல் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் பழைய மாணவரும் அணு விஞ்ஞானியும் பேராசிரியரும் தொழிலதிபரும் கனடிய அரசியல் செயற்பாட்டாளருமான கனடா வாழ் தமிழ் பேசும் அணு விஞ்ஞானி. பேராசிரியர் வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளை எழுதிய ‘அணுவைத் துளைத்து’ என்னும் நூலின் வெளியீட்டு விழா ஸ்காபுறோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது.