உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை நடாத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான 10வது பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி யுpசடை மாதம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் பிரான்ஸ் நாட்டில் Argentan நகரில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா, டென்மார்க், நோர்வே, அமெரிக்கா, பெல்ஜியம், சுவீடன், அவுஸ்திரேலியா, அயர்லாந்து, போத்துக்கல், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய 18க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந் 300 போட்டியாளர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழையமாணவர் சங்கத்தின் Annual Gala Dinner-2025
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த இராப்போசன ஒன்று கூடல் விழா (Annual Gala Dinner-2025) Durham இல் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் 05-03-2025 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
அவதானியின் கவிதைகள்…!
யாருக்கும் வெட்கமில்லை……✍️
என் தவணைமுறை வாக்குரிமை
இம்முறையும் உங்களுக்காக
உடைந்தவற்றைச் சரி செய்ய அல்ல
சட்டபூர்வமாக்க முயலும்
உங்கள் வருகையை உறுதி செய்ய
ஒவ்வொரு விரிசலும் உங்கள்
வெற்றிக்கான வரைகோடு
ஒவ்வொரு குறைபாடும் உங்கள் சட்டதிட்டத்திற்கான அனுமதி
கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் 25 வது விருது வழங்கும் விழா!!
கனடாவில் வாழும் தமிழ் மக்களின் வணிக ரீதியான சாதனைகளை அங்கீகரித்து அனைவருக்கும் உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் தொழில் ரீதியான பல தரப்பட்ட விருதுகளை வழங்கி ஊக்குவித்து வரும் கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் 25 வது தொழில் முனைவோர் விருது விழா கடந்த 12ம் திகதி சனிக்கிழமையன்று மார்க்கம் நகரில் அமைந்துள்ள ஜந்து நட்சத்திர ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றது. விருது விழாவிலும் அதனைத் தொடர்ந்து நடந்த Gala Night நிகழ்விலும் திரளான தமிழ் வர்த்தகப் பெருமக்களும், கனடிய அரசியல் மட்டத்தினைச் சார்ந்த பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை நடாத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான 10வது பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி
உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை நடாத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான 10வது பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி April மாதம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாட்டில் ஒழுங்கு செய்யப்படும். இந்தப் போட்டி இந்த வருடம் பிரான்ஸ் நாட்டில் Corday, Argentan நகரில் இடம் பெற உள்ளது.
சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா, டென்மார்க், நோர்வே, அமெரிக்கா, பெல்ஜியம், சுவீடன், அவுஸ்திரேலியா, அயர்லாந்து, போத்துக்கல், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய 18க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 300 போட்டியாளர்களுக்கு மேல் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
கனடாவில் தமிழ் மரபுத்திங்கள் பொங்கல் விழா!
சென்ற ஞாயிற்றுக்கிழமை 26-1-2025 கனடா கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பால் அல்பியன் வீதியில் உள்ள 925, திஸ்டில் நகர மண்டபத்தில் ஆசிரியர் திருமதி கமலவதனா சுந்தாவின் தலைமையில் தமிழ் மரபுத்திங்கள் மற்றும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக வீடு விற்பனை முகவர் வாருணன் ஸ்ரீகுமரகுரு கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் நடந்த கண்காட்சியில் தமிழ் வளர்த்த பெரியோர் மற்றும் தமிழ் மன்னர்களின் படங்களும், தமிழ் மரபு சார்ந்த காட்சிப்படங்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் (Happy New Year 2025) இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இந்த புத்தாண்டு அனைவர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பெரு மகிழ்ச்சி, மன அமைதி பல்கிப் பெருகட்டும். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். சமத்துவம் தழைக்கட்டும். அறம் வெல்லட்டும்,
எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் உலகளாவிய 3வது திறனாய்வுப் போட்டி – 2025
அதிஷ்டம் காத்திருக்கிறது – வெல்லுங்கள் 1,50,000 ரூபாய்கள்!
எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும்
உலகளாவிய 3வது திறனாய்வுப் போட்டி – 2025
தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் இடம்பெறும் குரு அரவிந்தன் எழுதிய நாவல், சிறுகதை தொடர்பான திறனாய்வுப் போட்டி.
Elson Badminton Club நடாத்திய 30வது வருடாந்த Gala 2024!
கனடாவில் இயங்கிவரும் Elson Badminton Club நடாத்திய 30வது வருடாந்த இராப்போசன விருந்து டிசம்பர் 6ம் திகதி சனிக்கிழமை மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள ‘” Grand Cinnamon Banquet & Convention Centre” மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அமரர் கே.ஜி.சிவானந்தசிங்கம் அவர்களின் படைப்பான ‘ஆரோக்கிய வாழ்வு’ மருத்துவ நூல் வெளியீட்டு விழா!
‘ஆரோக்கிய வாழ்வு’ மருத்துவ நூல் வெளியீட்டு விழாவோடு அமரர் சிவானந்தசிங்கம் அவர்களின் மறைவை நினைவு கூரும் நாளாக விளங்கிய அன்றைய நிகழ்வு கடந்த 24-11- 2024 அன்று கனடா ஸ்காபுறோவில் அமைந்துள்ள ஒன்றாரியோ- தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு சட்டத்தரணி தம்மையா ஶ்ரீபதி அவர்கள் தலைமை வகித்தார்.