iyapaaகனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயத்தின் – நெய் நிரப்பும் நிகழ்வு

இன்று டிசம்பர் மாதம் 26ம் நாள் இல.635 மிடில்பீல்ட் வீதியில் அமைந்துள்ள கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயத்தில் மிக பக்தி பூர்வமாக நடை பெற்ற நெய் நிரப்பும் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள். அடியார்கள் பக்தியுடன் சாமிமார்களுக்கு சிறியவர் பெரியவர்களென நெய் நிரப்பி வணங்கினார்கள்.

அந்நிகழ்வின் சில ஒளிப்படங்கள்

 

 

யப்ப விரதம்

1. சபரிமலை செல்பவர்கள் ஒருமண்டல காலம் (41நாட்கள்) விரதம் இருக்க வேண்டும்.

2. கருப்பு,நீலம், பச்சை,காவி போன்றவற்றில் ஏதாவது ஒரு நிற வேஷ்டியையும்,சட்டையும் அணிய வேண்டும்.

3. கார்த்திகை முதல் நாள் பெற்றோர்களை வணங்கி அவர்களின் அனுமதி பெற்று குருசாமியின் கரங்களால் மாலை அணிந்து கொள்ளவேண்டும். பெற்றோர் மூலமும் மாலை அணிந்து கொள்ளலாம்.

4. அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி யப்பனை 108 சரணம் கூறி பூஜை செய்ய வேண்டும்.இதே போல சூரியன் மறைந்த பின்பு மாலையில் நீராடி 108 சரணம் கூறி யப்பனுக்குப்பூஜை செய்ய வேண்டும். குளிப்பதற்குச் சோப்பு உபயோகிக்ககூடாது.

5. இரவில் தூங்கும் போது தலையணை,மெத்தை உபயோகிக்க கூடாது. பகலில் தூங்குவதைக் தவிர்க்க வேண்டும்.

6. பிரம்மச்சரிய விரதத்தை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இது மனோ வலிமையைப் பெருக்கி மனித வாழ்க்கையை உயர்த்துவதற்கு உதவுகிறது. மாதர்கள் யாவரையும் மாதாவாகக் காண வேண்டும். மாதவிலக்குச் சமய மாதர்களுடன் பேசுவதோ, பார்ப்பதோ கூடாது.

7. சைவ உணவு மட்டும் உண்ண வேண்டும்.மது அருந்தக் கூடாது. பீடி, சிகரெட், பான்மசாலா போன்றவற்றை அறவே நீக்கி விட வேண்டும்.

8. திரிகரண சுத்தி(மனம், வாக்கு, செயல்)ஆகிய வற்றில் கவனமாக இருக்க வேண்டும். யப்பனை எண்ணத்தில் எப்பொழுதும் மனதில் நினைத்து, பக்திப்பூர்வமாக ஐயன் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தால் எண்ணங்கள் தூய்மையாகும். செய்யும் செயல்களும், பேசும் பேச்சுக்களும் நல்லவிதமாக அமையும்.

9. சண்டை, சச்சரவுகளில் கலந்து கொள்ளக்கூடாது. எல்லோரிடமும் சாந்தமாகப் பழக வேண்டும்.

10. காமம், கோபம், கஞ்சத்தனம், மோகம், அகம் பாவம், துவேஷம் முதலிய குணங்களைக் குறைப்பதற்கு உதவ எப்பொழுதும் யப்பன் திருநாமத்தை உறுதுணையாக் கொள்ள வேண்டும். பக்தனின் நெஞ்சினில் எப்பொழுதும் நிறைந்து நிற்பது யப்பனின் பேரொளி திருவுருவமேயாகும்.

11. உரையாடும் போது சுவாமி சரணம் என்று சொல்லி துவங்குவதும், முடிக்கும் போதும் சுவாமி சரணம் என்று சொல்லி முடிப்பதும் நன்மைகளைத் தரும்.

12. ஒரு யப்ப பக்தரை வழியில் காண நேர்ந்தால் அவர் தெரியாதவராக இருந்தாலும் சுவாமி சரணம் என வணங்க வேண்டும்.

13. மாலை அணிந்து காணப்படும் ஆண்களை யப்பன் என்றும் பெண்களை மாளிகைப்புறம் என்றும் சிறுவர்களை மணிகண்டன் என்றும் சிறுமிகளைக் கொச்சு சுவாமி என்றும் அழைக்கவேண்டும்.

14. குடை, காலணிகள், சூதாடுதல், திரைப்படங்களுக்குச் செல்லுதல் தவிர்க்கப்பட வேண்டும்.

15. விரத காலங்களில் உணவின் அளவைக் குறைத்து உடலைக்குறைத்துக் கொள்ள வேண்டும். மார்கழி மாதத்தில் பதினைத்து தினங்களுக்காவது ஒரு வேளை உணவை விடுத்து விரதம் இருக்க வேண்டும்.

16. இலையில் சாப்பிடுவது நல்லது. உணவு உண்ண ஆரம்பிக்கும் பொழுது ஐயனை மனதில் நினைத்து, சரணம் கூறி சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.

17. கன்னி சுவாமிகள் கன்னி பூஜை நடத்த வேண்டும் அல்லது ஒரு சுவாமிக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். விரத காலங்களில் இயன்ற வரை அன்னதானம் செய்ய வேண்டும்.

18. நமது நெருங்கிய ரத்தத் தொடர்பு உள்ள தாய், தந்தை, சகோதரிகள் போன்றவர்களின் மரணம் ஏற்படுமாயின் மாலையைக் கழற்றி விட வேண்டும்.

19. பெண்கள் ருது மங்கல சடங்கிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக்கூடாது.

20. விரத காலங்களில் தலைமுடி வெட்டிக் கொள்வதோ, சேவிங் செய்து கொள்வதோ கூடாது.

21. மாலை அணிந்த எந்த யப்பன் வீட்டிலும் உணவு அருந்தலாம். கடைகளில் சாப்பிடுவது, தெருக்களில் விற்கும் பலகாரங்களை உண்பது கண்டிப்பாகக்கூடாது. 22. பக்தர்கள் நடத்தும் யப்ப பூஜை, பஜனைகளில் கலந்து கொள்ள வேண்டும்.