uthayan-2015கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் நடத்தும் 9 ஆவது சர்வதேச விருது வழங்கும் விழா நேற்று மாலை கனடா ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள மார்க்கம் கொன்வென்சன் மண்டபத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. 

குறித்த விருது விழாவில் வழங்கப்பட்ட ஆறு விருதுகளில் இரண்டு வெளிநாடுகளில் வாழும் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டது. 

அரசியல்வாதிகள், வர்த்தகப் பிரமுகர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலதரப்பட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர். 

இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளும் வெகு சிறப்பாக இடம்பெற்றது. அதனை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.