எங்கள் சுந்தரன் அன்பைப் பொழிந்தவன்
எங்கள் சுந்தரன் ஆற்றலைத் தந்தவன்
எங்கள் சுந்தரன் இன்னலைத் தீர்த்தவன்;
எங்கள் சுந்தரன் ஈகைப் பெருமகன்
எங்கள் சுந்தரன் உள்ளம் தெளிந்தவன்
எங்கள் சுந்தரன் ஊக்கம் மிகுந்தவன்
எங்கள் சுந்தரன் எண்ணம் பகிர்ந்தவன்
எங்கள் சுந்தரன் ஏற்றம் நிறைந்தவன்
எங்கள் சுந்தரன் ஐயம் தீர்த்தவன்
எங்கள் சுந்தரன் ஒற்றுமை கண்டவன்
எங்கள் சுந்தரன் ஓதி அறிந்தவன்
எங்கள் சுந்தரன் ஒளவியம் அற்றவன்
என்னவனே!
மலை சரிந்ததை நேரில் கண்டேன்
மின்னல் தாக்கியதை முழுமையாய் உணர்ந்தேன்
என் இதயம் வெடித்ததை நானே பார்த்தேன்
இறைவா நீ கவர்ந்தது ஓர் உயிரல்லவென அறிந்தேன்
என்னிடமிருந்த உன் பிரதிநிதி தானென்றேன்
ஏமாந்தது நான் மட்டுமல்ல என்றேன்
நீயும் தானென்று உனக்கு உரைத்தேன்
ஆனாலும் குறையொன்றும் இல்லை
என் உள்ளம் கவர் சுந்தரனே
நீ சேர்த்த சொந்தங்கள் சூழ்ந்திருக்க
எம் மூவருக்கும் குறையொன்றும் இல்லை என்னவனே!
நீ கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும்
நீ வென்ற உள்ளங்கள் உள்ளவரை -எம்
மூவருக்கும் குறையொன்றும் இல்லை என்னவனே!
-உங்கள் அம்மு