Justin-Trudeau-Pongal-1aஸ்காபுறோ தமிழர் மரபுரிமை நாள் விழாவில் கனடியப் பிரதமர் பெருமிதம்
தைப்பொங்கலையும் கொண்டாடும் ஒரு நாடாக எமது கனடா பல்கலாச்சாரக் கோட்பாடுகளோடு சேர்ந்து உயர்ந்துள்ளதைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறான வளர்ச்சியை நாம் அடைவதற்கு எமது மக்கள் பல்லின கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மிகவும் மதிப்பதே காரணம் என்பதையும் நான் நன்கு உணர்கின்றேன். இவ்வாறு கடந்த செவ்வாய்கிமையன்று ஸ்காபுறோ கொன்வென்சன் மண்டபத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கூடியிருந்த மாபெரும் வைபவத்தில் கனடியப் பிரதமர் கௌரவ ஜஸ்டின் ரூடுடோ பெருமிதத்தோடு கூறினார்.

அத்துடன் கனடா வாழ் தமிழர்களின் கடுமையான உழைப்பையும், கனடாவின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பையும் பிரதமர் கௌரவ ஜஸ்டின் ரூடுடோ புகழ்ந்துரைத்தார். தனது உரையில் "இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். நன்றி" என கலந்து கொண்டிருந்தவர்களின் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் தமிழில் கூறி முடித்தார். அதனையடுத்து பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் எமது பாராளுமன்ற உறுப்பினர் திரு ஹரி ஆனந்தசங்கரி மற்றும் கவுன்சிலர் நீதன் சாண், ரொறன்ரோ மேயர் ஜோன் ரோரி உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் நகர சபை அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர். 

Justin-Trudeau-Pongal-4

Justin-Trudeau-Pongal-11

Justin-Trudeau-Pongal-6

Justin-Trudeau-Pongal-7

Justin-Trudeau-Pongal-8

Justin-Trudeau-Pongal-9

Justin-Trudeau-Pongal

Justin-Trudeau-Pongal-5

Justin-Trudeau-Pongal-3

Justin-Trudeau-Pongal-2