கடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் 10ம் திகதி சனிக்கிழமையும் கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற "தமிழின் சுவை" Taste of Tamil என்னும் மாபெரும் திறந்த வெளி இசை நிகழ்ச்சிக்கு மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்த வண்ணம் இருந்தது. அத்துடன் வற்றாத இசை வெள்ளத்தை ஓடவிட்ட அந்த மேடையில் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை எமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி உட்பட பல அரசியல் தலைவர்கள் இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய வர்த்தகப் பெருமக்களுக்கு கௌரவ கேடயங்களையும், மலர்ச் செண்டு ஆகியவற்றை ஆகியவற்றை வழங்கினார்கள். அட்டகாசமாக ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் கூட்டத்தின் மத்தியில் சுப்பர் சிங்கர் பாடகரும் பாடகியுமான செந்தில்கணேஸ் லட்சுமி ஆகியோர் பாடி ரகிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றார்கள்.