siva1aஅன்னையின் மடியில் 08-07-1934
ஆண்டவன் அடியில் 02-10-2022

வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல:59, குமாரசாமி வீதி, 94/12 விவேகானந்த மேடு, கொட்டாஞ்சேனையில் வசித்து வந்தவருமான திரு. பேரம்பலம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 02-10-2022 ஞாயிற்றுக் கிழமையன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பேரம்பலம்-பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கரம்பொன் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்-யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ஜெயலட்சுமி சிவசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு கணவரும்,

Dr.சிவதாஸ்(உள மருத்துவ நிபுணர் யாழ் போதனா வைத்தியசாலை), ஜெயந்தி, Dr.சண்முகதாஸ் (NHSL), வசந்தி (Australia), சுகந்தி(Audit Officer, NIBM) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

Dr.சிவனேஸ்வரி(NHSL), காலஞ்சென்ற குகானந்தா, Dr.வனிதா(DGH. Kilinochchi), கோணேஸ்வரன் (Australia). அருணோதயன் (Australia) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிநயா, கோகுலன், தனுஷன், பிரணவன், விவேகா, ஸ்ரீமன் ஆகியோரின் அன்புப் பேரனும், 

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, மயில்வாகனம், பராசக்தி, சரஸ்வதி, சண்முகரட்ணம், சுப்பையா ஆகியோரின் சகோதரரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, தெய்வானைப்பிள்ளை, செல்லப்பா, ரத்தினம், யோகலட்சுமி ஆகியோரின் மைத்துனரும், 

காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம் மற்றும் பாக்கியலட்சுமி(கனடா), ஜெகதாம்பிகை(கனடா), காலஞ்சென்ற விஜயலட்சுமி, மற்றும் வரதலட்சுமி(கனடா), தனபாலசிங்கம்(கனடா), தனலட்சுமி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் 05-10-2022 புதன்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 06-010-2022 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 3.00 மணிக்கு ஈமக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு தகனக் கிரியைக்காக இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
இல: 94/12 விவேகானந்த மேடு, கொழும்பு-13
தொடர்பு: 011 2435137, 077 3420538, 0777730224

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

sivasubramaniam kanneer anjali1