மேலைக்கரம்பொன் பதியில் வேண்டும் வரங்களை வாரிவழங்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகமூர்த்தி சுவாமியின் கந்தசஷ்டி உற்சவம் 26-10-2022 புதன்கிழமை அரம்பமாகி 30-10-2022 ஞாயிற்றுக்கிழமை சூரன்போர், தொடர்ந்து திருக்கல்யாணத்துடன் பக்தி பூர்வமாக நடைபெற்றது. அத்துடன் முதல் வாரத்தில் 20-10-2022 வியாழக்கிழமை இரவு புதிதாக உருவாக்கப்பட்ட சப்பறம் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளோட்ட நிகழ்வும் கண்கொள்ளாக் காட்சியாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது.