எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் உலகளாவிய 3வது திறனாய்வுப் போட்டி – 2025

அதிஷ்டம் காத்திருக்கிறது – வெல்லுங்கள் 1,50,000 ரூபாய்கள்!

எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும்

உலகளாவிய 3வது திறனாய்வுப் போட்டி – 2025

தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் இடம்பெறும் குரு அரவிந்தன் எழுதிய நாவல், சிறுகதை தொடர்பான திறனாய்வுப் போட்டி.


Elson Badminton Club நடாத்திய 30வது வருடாந்த Gala 2024!

கனடாவில் இயங்கிவரும் Elson Badminton Club நடாத்திய 30வது வருடாந்த இராப்போசன விருந்து டிசம்பர் 6ம் திகதி சனிக்கிழமை மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள ‘” Grand Cinnamon Banquet & Convention Centre” மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.


அமரர் கே.ஜி.சிவானந்தசிங்கம் அவர்களின் படைப்பான ‘ஆரோக்கிய வாழ்வு’ மருத்துவ நூல் வெளியீட்டு விழா!

‘ஆரோக்கிய வாழ்வு’ மருத்துவ நூல் வெளியீட்டு விழாவோடு அமரர் சிவானந்தசிங்கம் அவர்களின் மறைவை நினைவு கூரும் நாளாக விளங்கிய அன்றைய நிகழ்வு கடந்த 24-11- 2024 அன்று கனடா ஸ்காபுறோவில் அமைந்துள்ள ஒன்றாரியோ- தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு சட்டத்தரணி தம்மையா ஶ்ரீபதி அவர்கள் தலைமை வகித்தார்.


எமது கலைஞர்களின் படைப்பில் உருவான “ஆக்குவாய் காப்பாய” கனடியத் தமிழ்த் திரைப்படம்

கனடா ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள WOODSIDE CINEMA  திரையரங்கில் எமது கலைஞர்களின் படைப்பில் உருவான ” ஆக்குவாய் காப்பாய்” திரைப்படம் ஒக்டோபர்; மாதம் 31 ஆம் திகதி மதியம் 1.00 மணிக்கு பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டது. இந்தப்படம் கனடா நாட்டில் வசிக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களை மையப்படுத்திய கதைக்கருவைக் கொண்டிருக்கின்றது.


கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா-2024

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘விருது விழா -2024’ஸ்காபரோ சிவிக்சென்றர் மண்டபத்தில் 26-10–2024 அன்று இணையத்தின் தலைவர் திரு. கனகசபை ரவீந்திரநாதன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 31 ஆண்டுகளாக இந்தக் கனடிய மண்ணில் சிறப்பாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர்களாக திரு. தெ.சண்முகராசா, திரு. திருமாவளவன், திரு. வி.கந்தவனம், திரு.சின்னையா சிவநேசன், திரு.ஆர். என். லோகேந்திரலிங்கம், திரு.சிவபாலு தங்கராசா, திரு.சி. சிவநாயகமூர்த்தி,  பேராசிரியர் திரு.இ. பாலசுந்தரம், திரு.குரு அரவிந்தன், திரு. அகணி சுரேஸ், திரு.க. ரவீந்திரநாதன் ஆகியோர் இதுவரை பணியாற்றியிருந்தனர்.


வதனம் மஞ்சரி – கனடா சிறப்பிதழ் வெளியீடு

சென்ற ஞாயிற்றுக்கிழமை 13-10-2024 அன்று கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஆசிரியர் குழுவினரால் வெளியிடப்படும் காலாண்டுச் சஞ்சிகையான வதனம் இதழின் ‘கனடாச் சிறப்பிதழ்’ ரொறன்ரோ 925 அல்பியன் வீதியில் உள்ள சமூகமையத்தில் வெளியிட்டு வைக்கப் பெற்றது.

‘பெண்கள், மற்றும் இளைய தலைமுறையினர் எழுதும் சமையற் குறிப்புகள், எமது பாரம்பரிய விளையாட்டுகள், உணவு வகைகள், பயணக்கட்டுரைகள், தாங்கள் பிறந்த மண் பற்றிய ஆக்கங்கள், கவிதைகள், சிறுகதைகள் மற்றும் தாயகம், கனடா பற்றிய செய்திகள் போன்றவை மிகவும் பயனுள்ளதாகவும், இங்குள்ள இளைய தலைமுறையினர் அவற்றை அறிந்து கொள்ளக் கூடியதாகவும் இருப்பதால், வதனம் இதழ் சிறந்ததொரு இலக்கியப் பத்திரிகையாகக் கனடாவில்  வெளிவருவதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.


அதிபர் பொ. கனகசபாபதி கனடாவில் நினைவுகூரப்பட்டார்

மகாஜனக் கல்லூரி முன்நாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த 10 வது ஆண்டு நினைவுநாள் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் 4-9- 2024 அன்று நினைவு கூரப்பட்டது. பொதுவாக ஒருவர் மறைந்த தினம் என்றால் அது ஒரு சோகசம்பவமாக இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், அவர் புகுந்த மண்ணில் தமிழ் இனத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி அதிபரின் பிறந்த தினத்திலன்று ஒவ்வொரு வருடமும் இங்குள்ள நண்பர்கள், பழைய மாணவர்கள், மற்றும் குடும்பத்தினரால் நினைவு கூரப்படுகின்றது.


ரொறன்ரோ வாழ் பன்முகக் கலைஞர் ‘பாரதி ஆர்ட்ஸ்’ மதிவாசன் அவர்களின் இயக்கத்தில் செப்டம்பர் 28 அன்று திரைக்கு வரவுள்ள ‘ஆக்குவாய் காப்பாய்’

கடந்த 23-08-2024 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ‘ஆக்குவாய் காப்பாய்’ திரைப்படத்தின் அறிமுக வைபவத்தில் ‘பாரதி ஆர்ட்ஸ்’ மதிவாசன் அவர்களின் அழைப்பை ஏற்று அனைவரும் அங்கு கலந்து கொண்டனர். நிகழ்வில் ஆரம்ப உரையாற்றிய மதிவாசன் அவர்கள் பின்வருமாறு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். ‘உலகில் பல நாடுகளில் வாழும் எமது தமிழ் மக்கள் மத்தியிலிருந்து தொடர்ச்சியாக பல திரைப்படங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் கனடாவிலும் அதற்கு விதி விலக்காக இருக்காமல் பல கலைஞர்கள் தொடர்ச்சியாக இந்த திரைப்படத்துறையில் இயங்கிவருகின்றார்கள்.


கியூபிசக் கோட்பாட்டை முன்வைத்து ‘என்ன சொல்லப் போகிறாய்?’

நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுதான் ‘சூம்’ என்று சொல்லப்படுகின்ற மெய்நிகர் நிகழ்வாகும். பல்வேறு நாடுகளில் இருந்தும், பலரும் பங்கு பற்றக்கூடியதாகவும் இது அமைக்கப்பட்டிருக்கின்றது. சென்ற சனிக்கிழமை யூன் 15 ஆம் திகதி இலக்கியவெளி குழுவினர் சர்வதேச ரீதியாக இலக்கியம் சார்ந்து நடத்திய மெய் நிகர் நிகழ்வு ஒன்று இடம் பெற்றிருந்தது. கோவிட் காரணமாக வெளிவராத நூல்கள் பற்றிய திறனாய்வுகளும், கருத்துப் பரிமாற்றங்களும் கனடிய தமிழ் இலக்கியத்தின் துரித வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது.


கனடாவில் கோவிலூர் செல்வராஜனின் நூல் வெளியீடு

தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பெற்ற எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜன் அவர்களின் நூல்கள் வெளியீட்டு மற்றும் அறிமுகவிழா சென்ற மே மாதம் 25 ஆம் திகதி 2024  அன்று கனடா ஸ்காபறோ நகரில் உள்ள பைரவி நுண்கலை மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் மேற்படி விழாவிற்கு தற்போதைய தலைவரும் கவிஞருமான அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.