யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் கலை மரபுரிமைக் கழக உபகுழு ஒருங்கிணைக்கும் வருடாந்த நிகழ்வான கலையரசி விழா-2025 ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 12, 2025, இல் அமைந்துள்ள Flato Markham Theatre மண்டபம் நிறைந்த பார்வையாளர்களின் மத்தியில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
கனடிய நிகழ்வுகள்
கனடிய நிகழ்வுத்தொகுப்பு
கனடா ஸ்காபுறோ- Villa Karuna Home for Seniors அமைப்பு நடத்திய Golden Super Singer Season 7
கடந்த சனிக்கிழமை 27-09-2025 அன்று தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில். கனடா ஸ்காபுறோ- Villa Karuna Home for Seniors அமைப்பு நடத்திய Golden Super Singer Season 7 பாடல் போட்டியின் இறுதிச் சுற்றில் ஸ்காபுறோவை வதிவிடமாகக் கொண்ட பாடகர் குகதாசன் சோமசுந்தரம் அவர்கள் முதலிடம் பெற்று வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.
IROQUOIS Tennis Club விளையாட்டுக் கழகத்தின் 50வது ஆண்டு நிறைவையொட்டிய ஒன்று கூடல்
IROQUOIS Tennis Club விளையாட்டுக் கழகத்தின் 50வது ஆண்டு ஒன்று கூடல் ஸ்காபுரோவில் அமைந்துள்ள IROQUOIS Tennis Club Court முன்றலில் 09-14-2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் கழக விளையாட்டு வீர வீராங்கனைகள் அவர்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டாடி மகிழ்ந்தனர். நிகழ்வில் பலரும் இசை நிகழச்சியுடன் சேர்ந்து ஆடிப்பாடினர். முடிவில் எல்லோருக்கும் பலவித உணவுகள் பரிமாறப்பட்டன.
‘சோக்கல்லோ’ சண்முகம் அவர்களின் வெற்றியின் இரகசியம் அவரது இளமைக் காலமே!
கடந்த 02-08-2025 சனிக்கிழமையன்று ஸ்காபுறோவில் அமைந்துள்ள ‘மல்வேர்ன் சன சமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்ற சோக்கல்லோ’ சண்முகம் என்னும் கலைஞரின் 90வது அகவைப்(நவதி விழா) பெருவிழாவில் இந்த அற்புதமான விழாவிற்கு ‘;தமிழகன்’ மதியழகன் அவர்கள் தலைமை தாங்கினார். ஏழாலை மக்கள் நலன்புரிச் சங்கத்தினரால் நடத்தப்பெற்ற இந்த விழாவில் பல்துறை சார்ந்தவர்கள் உரையாற்றினார்கள்.
ஒரு நூற்றாண்டின் ஆச்சரியம்! திரு வினாசித்தம்பி செல்வநாயகம்
இன்று 20-05-2025 செவ்வாய்கிழமை தனது நூறாவது ஆண்டு பிறந்த நாளை உற்றார் உறவினர்னளுடன் கொழும்பில் கொண்டாடும் தென் கரம்பொனைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் வினாசித்தம்பி செல்வநாயகம் அவர்களை இன்னும் பல ஆண்டுகள் நீண்ட ஆயுளோடு நலமாக வாழ கரம்பொன்.நெட் இணையத்தளத்தின் சார்பில் வாழ்த்துகின்றோம்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழையமாணவர் சங்கத்தின் Annual Gala Dinner-2025
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த இராப்போசன ஒன்று கூடல் விழா (Annual Gala Dinner-2025) Durham இல் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் 05-03-2025 சனிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.
உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் ஏற்பாட்டில் 10ஆவது உலகக்கிண்ணப் போட்டி
உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை நடாத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான 10வது பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி யுpசடை மாதம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் பிரான்ஸ் நாட்டில் Argentan நகரில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா, டென்மார்க், நோர்வே, அமெரிக்கா, பெல்ஜியம், சுவீடன், அவுஸ்திரேலியா, அயர்லாந்து, போத்துக்கல், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய 16ற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 276 போட்டியாளர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள்.
கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் 25 வது விருது வழங்கும் விழா!!
கனடாவில் வாழும் தமிழ் மக்களின் வணிக ரீதியான சாதனைகளை அங்கீகரித்து அனைவருக்கும் உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் தொழில் ரீதியான பல தரப்பட்ட விருதுகளை வழங்கி ஊக்குவித்து வரும் கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் 25 வது தொழில் முனைவோர் விருது விழா கடந்த 12ம் திகதி சனிக்கிழமையன்று மார்க்கம் நகரில் அமைந்துள்ள ஜந்து நட்சத்திர ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றது. விருது விழாவிலும் அதனைத் தொடர்ந்து நடந்த Gala Night நிகழ்விலும் திரளான தமிழ் வர்த்தகப் பெருமக்களும், கனடிய அரசியல் மட்டத்தினைச் சார்ந்த பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடாத்திய உலகளாவிய 3வது திறனாய்வுப் போட்டி – 2025
2025 ஆண்டு திறனாய்வுப் போட்டி- 3 இல் பரிசு பெற்றவர்களின் விவரம்,
இந்தப் போட்டிக்கு 134 திறனாய்வுக்கட்டுரைகள் இந்தியா, இலங்கை, பிரித்தானியா, மலேசியாஇ பிரான்ஸ், ஜெர்மனி,டென்மார்க், அவுஸ்ரேலியா, கனடா,அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கிடைத்திருந்தன. எல்லாக் கட்டுரைகளும் சிறப்பாகவே இருந்தன. ஆனாலும் இறுதிச்சுற்றுக்காகப் 18 கட்டுரைகள் தெரிவாகி, அவற்றுக்குப் பரிசுகள் கிடைத்திருக்கின்றன. பரிசுகள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.
போட்டியின் நடுவர்களாகப் பேராசிரியர் கரு முத்தயா (தமிழ்நாடு), ஆய்வாளர் முனைவர் வாசுகி நகுலராஜா (கனடா), ஆய்வாளர் டாக்டர் மேரி கியூரி போல் (கனடா), எழுத்தாளர் கே. எஸ் சுதாகர் (அவுஸ்ரேலியா) ஆகியோர் பணியாற்றினார்கள். இவர்களுக்கும் மற்றும் போட்டியில்பங்குபற்றியவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.
கனடாவில் தமிழ் மரபுத்திங்கள் பொங்கல் விழா!
சென்ற ஞாயிற்றுக்கிழமை 26-1-2025 கனடா கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பால் அல்பியன் வீதியில் உள்ள 925, திஸ்டில் நகர மண்டபத்தில் ஆசிரியர் திருமதி கமலவதனா சுந்தாவின் தலைமையில் தமிழ் மரபுத்திங்கள் மற்றும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக வீடு விற்பனை முகவர் வாருணன் ஸ்ரீகுமரகுரு கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் நடந்த கண்காட்சியில் தமிழ் வளர்த்த பெரியோர் மற்றும் தமிழ் மன்னர்களின் படங்களும், தமிழ் மரபு சார்ந்த காட்சிப்படங்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.










