கனடாவில் நடந்த ‘நூல்களின் சங்கமம்’ புத்தகக் கண்காட்சி

சென்ற சனிக்கிழமை 20-4-2024 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாகவும், உலகப்புத்தகத் தினத்தைக் கொண்டாடும் முகமாகவும் ரொறன்ரோவில் கனடியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டும், விற்பனைக்கும் கனடியத் தமிழ் எழுத்தாளர் இணையத்தால் வைக்கப்பட்டிந்தன. கனடாவின் பல பாகங்களில் இருந்தும் மிகப் பெரிய அளவில பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வுக்கு ஆதரவு நல்கினார்கள். முக்கியமாக இளையதலைமுறையினரும், சிறுவர்களும் பெற்றோருடன் வந்து கலந்து கொண்டு தமக்கு விரும்பிய நூல்களை வாங்கிச் சென்றது குறிப்பிடத் தக்கது.


யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் Annual Gala Dinner-2024

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த இராப்போசன ஒன்று கூடல் விழா (Annual Gala Dinner-2024) ஸ்காபுரோவில் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் 05-04-2024 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா வாழ் நலன் விரும்பிகள் அனைவரும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


கனடாவில் செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை

செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை சித்திரை மாதம் 6ம் திகதி சனிக்கிழமை கனடா, மார்க்கத்தில் அமைந்துள்ள கலைக்கோவில் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. சலங்கைப்பூசை என்று சொல்வதைவிட, எமது இளைய தலைமுறையினருக்கு எமது பாரம்பரிய கலைகளை அறிமுகம் செய்யும் ஒரு நிகழ்வாகவே இது இருந்தது.  “வளரும் பயிரை முளையிலே தெரியும்” என்பதற் கிணங்க  அகவை எட்டு நிரம்பிய அதிசா தனது மூன்று வயதில் இருந்து கலைக்கோவில் நடன ஆசிரியை நாட்டியக் கலாநிதி ஸ்ரீமதி வனிதா குகேந்திரனிடம் நடனத்தைச் சாத்திர முறைப்படி கற்று வருவது குறிப்பிடத்தக்கது.


கவிஞர் வி. கந்தவனம் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்குப் பேரிழப்பாகும்.


கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்கு, குறிப்பாகக் கனடிய மக்களுக்குப் பேரிழப்பாகும். காங்கேசந்துறையில் நடக்கும் இலக்கிய விழாக்களில், மாணவப்பருவத்தில் குறிப்பாகப் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவற்றில் கவிஞரைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் இங்கே கனடாவில் அதிபர் பொ. கனகசபாபதி வீட்டில்தான் இவரை முதலில் சந்தித்தேன். உதயன் சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கம் கிடைத்தபோது என்னை அழைத்து வாழ்த்தியிருந்தார். அதன்பின் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக எனக்கு ஒரு பதவியையும் பெற்றுத் தந்தார். அதன் பின்தான் வரவேற்புரையோ அல்லது நன்றியுரையோ மேடையில் ஏறிச் சொல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.


ஈழத்து கலைஞர்களின் படைப்பில் உருவான “டக் டிக் டோஸ்”

கடந்த வாரம் கனடா ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள WOODSIDE CINEMA திரையரங்கில் எமது கலைஞர்களின் படைப்பில் உருவான ” டக் டிக் டோஸ்” திரைப்படம் மதியம் 1.00 மணிக்கு பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டது. நிகழ்வில் திரையரங்கின் ஆசனங்கள் முழுவதும் பார்வையாளர்களால் நிறைந்து காணப்பட்டது ஈழத்து கலைஞர்களின் படைப்பை ஊக்குவிப்பதற்கான கனடா வாழ் தமிழ் மக்களின் பேராதரவாகும். நிகழ்வில் “புத்திகெட்ட மனிதர் எல்லாம்” படத்தில் சைந்தவி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்த சிந்துஜா அவர்கள் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு தனது அனுபவங்களை வழங்கியிருந்தார்.


தமிழன் வழிகாட்டி செந்தியின் “செந்தீ” குறும் திரைப்படம்

ஈழத்து திரைப்பட வரலாற்றில் வெற்றி படங்களின் வரிசையில் ‘செந்தீ” குறும் திரைப்படம் Rameshwaram International Film Festival வழங்கிய ‘GOLDEN SHELL AWARDS” பெற்றுக் கொண்டது.
கதை, வசனம், இயக்கம், பாடல்,
தயாரிப்பு அனைத்திற்கும் கனடிய வர்த்தக கைநூலான ‘தமிழன் வழிகாட்டி” வெளியீட்டாளர் செந்திலாதன் ‘செந்தி” உரியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


கனடா கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின் தைப்பொங்கல் விழா!

கனடாவில் இந்த வருடத் தமிழ் மரபுக் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன. சென்ற ஞாயிற்றுக்கிழமை 28-1-2024 அன்று ‘கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின்’ பொங்கல் விழாவும் மரபுத்திங்களும் மிகவும் சிறப்பாக ஒன்ராறியோ, எத்தோபிக்கோவில் கொண்டாடப்பட்டது. மங்கள விளக்கேற்றிக் கனடா தேசிய கீதம் தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு மொழிகள் கலந்து பாடப்பெற்றது. தொடர்ந்து தமிழ்வாழ்த்தும் அகவணக்கமும் இடம் பெற்றன.


மொன்றியால் மாநகரில் நடைபெற்ற ‘தமிழ் மரபுத் திங்கள்’ விழாவில் கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் கலந்து சிறப்பித்தார்!

கடந்த 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மொன்றியால் மாநகரில் 40 அமைப்புக்கள் ஒன்றிணைந்து பிரமாண்டமான முறையில் நடத்திய ‘தமிழ் மரபுத் திங்கள்’ விழா காலை தொடக்கம் மாலை வரை சிறப்பாக நடைபெற்றது. மேற்படி விழாவில் எமது ஸ்காபுறோ தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி உட்பட தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சகிதம் கலந்து கொண்ட கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் தனது உரையில் அவரது அன்பையும் பொழிந்து கனடா வாழ் தமிழ் மக்கள் நிகழ்த்தும் சாதனைகளுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.


பொங்கல் விழாவில் பட்டிமன்ற நட்சத்திரப் பேச்சாளர் திரு. மோகனசுந்தரம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா தங்களது 30வது ஆண்டு பொங்கல் விழாவை கடந்த 20-01-2024 சனிக்கிழமை அன்று ஸ்காபறோ மாநகரில் அமைந்துள்ள தமிழ் இசைக் கலாமன்ற அரங்கில் வெகு சிறப்பாகக்கொண்டாடியது. சிறப்புப் பேச்சாளராக பட்டிமன்ற
நட்சத்திரப் பேச்சாளர் திரு. மகனசுந்தரம்
கலந்து கொண்டு சிறப்பித்தார்.


சென்னை புத்தகக் கண்காட்சி – 2024

47-வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் வை.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு ஆரம்பமானது. இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்திருந்தார். விரும்பிய நூல்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை இந்தக் கண்காட்சி ஏற்படுத்தி இருந்தது.