உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை நடாத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான 10வது பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி யுpசடை மாதம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் பிரான்ஸ் நாட்டில் Argentan நகரில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா, டென்மார்க், நோர்வே, அமெரிக்கா, பெல்ஜியம், சுவீடன், அவுஸ்திரேலியா, அயர்லாந்து, போத்துக்கல், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய 16ற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 276 போட்டியாளர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள்.
கனடிய நிகழ்வுகள்
கனடிய நிகழ்வுத்தொகுப்பு
கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் 25 வது விருது வழங்கும் விழா!!
கனடாவில் வாழும் தமிழ் மக்களின் வணிக ரீதியான சாதனைகளை அங்கீகரித்து அனைவருக்கும் உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் தொழில் ரீதியான பல தரப்பட்ட விருதுகளை வழங்கி ஊக்குவித்து வரும் கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் 25 வது தொழில் முனைவோர் விருது விழா கடந்த 12ம் திகதி சனிக்கிழமையன்று மார்க்கம் நகரில் அமைந்துள்ள ஜந்து நட்சத்திர ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றது. விருது விழாவிலும் அதனைத் தொடர்ந்து நடந்த Gala Night நிகழ்விலும் திரளான தமிழ் வர்த்தகப் பெருமக்களும், கனடிய அரசியல் மட்டத்தினைச் சார்ந்த பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடாத்திய உலகளாவிய 3வது திறனாய்வுப் போட்டி – 2025
2025 ஆண்டு திறனாய்வுப் போட்டி- 3 இல் பரிசு பெற்றவர்களின் விவரம்,
இந்தப் போட்டிக்கு 134 திறனாய்வுக்கட்டுரைகள் இந்தியா, இலங்கை, பிரித்தானியா, மலேசியாஇ பிரான்ஸ், ஜெர்மனி,டென்மார்க், அவுஸ்ரேலியா, கனடா,அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கிடைத்திருந்தன. எல்லாக் கட்டுரைகளும் சிறப்பாகவே இருந்தன. ஆனாலும் இறுதிச்சுற்றுக்காகப் 18 கட்டுரைகள் தெரிவாகி, அவற்றுக்குப் பரிசுகள் கிடைத்திருக்கின்றன. பரிசுகள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.
போட்டியின் நடுவர்களாகப் பேராசிரியர் கரு முத்தயா (தமிழ்நாடு), ஆய்வாளர் முனைவர் வாசுகி நகுலராஜா (கனடா), ஆய்வாளர் டாக்டர் மேரி கியூரி போல் (கனடா), எழுத்தாளர் கே. எஸ் சுதாகர் (அவுஸ்ரேலியா) ஆகியோர் பணியாற்றினார்கள். இவர்களுக்கும் மற்றும் போட்டியில்பங்குபற்றியவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.
கனடாவில் தமிழ் மரபுத்திங்கள் பொங்கல் விழா!
சென்ற ஞாயிற்றுக்கிழமை 26-1-2025 கனடா கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பால் அல்பியன் வீதியில் உள்ள 925, திஸ்டில் நகர மண்டபத்தில் ஆசிரியர் திருமதி கமலவதனா சுந்தாவின் தலைமையில் தமிழ் மரபுத்திங்கள் மற்றும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக வீடு விற்பனை முகவர் வாருணன் ஸ்ரீகுமரகுரு கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் நடந்த கண்காட்சியில் தமிழ் வளர்த்த பெரியோர் மற்றும் தமிழ் மன்னர்களின் படங்களும், தமிழ் மரபு சார்ந்த காட்சிப்படங்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Elson Badminton Club நடாத்திய 30வது வருடாந்த Gala 2024!
கனடாவில் இயங்கிவரும் Elson Badminton Club நடாத்திய 30வது வருடாந்த இராப்போசன விருந்து டிசம்பர் 6ம் திகதி சனிக்கிழமை மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள ‘” Grand Cinnamon Banquet & Convention Centre” மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அமரர் கே.ஜி.சிவானந்தசிங்கம் அவர்களின் படைப்பான ‘ஆரோக்கிய வாழ்வு’ மருத்துவ நூல் வெளியீட்டு விழா!
‘ஆரோக்கிய வாழ்வு’ மருத்துவ நூல் வெளியீட்டு விழாவோடு அமரர் சிவானந்தசிங்கம் அவர்களின் மறைவை நினைவு கூரும் நாளாக விளங்கிய அன்றைய நிகழ்வு கடந்த 24-11- 2024 அன்று கனடா ஸ்காபுறோவில் அமைந்துள்ள ஒன்றாரியோ- தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு சட்டத்தரணி தம்மையா ஶ்ரீபதி அவர்கள் தலைமை வகித்தார்.
எமது கலைஞர்களின் படைப்பில் உருவான “ஆக்குவாய் காப்பாய” கனடியத் தமிழ்த் திரைப்படம்
கனடா ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள WOODSIDE CINEMA திரையரங்கில் எமது கலைஞர்களின் படைப்பில் உருவான ” ஆக்குவாய் காப்பாய்” திரைப்படம் ஒக்டோபர்; மாதம் 31 ஆம் திகதி மதியம் 1.00 மணிக்கு பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டது. இந்தப்படம் கனடா நாட்டில் வசிக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களை மையப்படுத்திய கதைக்கருவைக் கொண்டிருக்கின்றது.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா-2024
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘விருது விழா -2024’ஸ்காபரோ சிவிக்சென்றர் மண்டபத்தில் 26-10–2024 அன்று இணையத்தின் தலைவர் திரு. கனகசபை ரவீந்திரநாதன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 31 ஆண்டுகளாக இந்தக் கனடிய மண்ணில் சிறப்பாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர்களாக திரு. தெ.சண்முகராசா, திரு. திருமாவளவன், திரு. வி.கந்தவனம், திரு.சின்னையா சிவநேசன், திரு.ஆர். என். லோகேந்திரலிங்கம், திரு.சிவபாலு தங்கராசா, திரு.சி. சிவநாயகமூர்த்தி, பேராசிரியர் திரு.இ. பாலசுந்தரம், திரு.குரு அரவிந்தன், திரு. அகணி சுரேஸ், திரு.க. ரவீந்திரநாதன் ஆகியோர் இதுவரை பணியாற்றியிருந்தனர்.
வதனம் மஞ்சரி – கனடா சிறப்பிதழ் வெளியீடு
சென்ற ஞாயிற்றுக்கிழமை 13-10-2024 அன்று கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஆசிரியர் குழுவினரால் வெளியிடப்படும் காலாண்டுச் சஞ்சிகையான வதனம் இதழின் ‘கனடாச் சிறப்பிதழ்’ ரொறன்ரோ 925 அல்பியன் வீதியில் உள்ள சமூகமையத்தில் வெளியிட்டு வைக்கப் பெற்றது.
‘பெண்கள், மற்றும் இளைய தலைமுறையினர் எழுதும் சமையற் குறிப்புகள், எமது பாரம்பரிய விளையாட்டுகள், உணவு வகைகள், பயணக்கட்டுரைகள், தாங்கள் பிறந்த மண் பற்றிய ஆக்கங்கள், கவிதைகள், சிறுகதைகள் மற்றும் தாயகம், கனடா பற்றிய செய்திகள் போன்றவை மிகவும் பயனுள்ளதாகவும், இங்குள்ள இளைய தலைமுறையினர் அவற்றை அறிந்து கொள்ளக் கூடியதாகவும் இருப்பதால், வதனம் இதழ் சிறந்ததொரு இலக்கியப் பத்திரிகையாகக் கனடாவில் வெளிவருவதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
அதிபர் பொ. கனகசபாபதி கனடாவில் நினைவுகூரப்பட்டார்
மகாஜனக் கல்லூரி முன்நாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த 10 வது ஆண்டு நினைவுநாள் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் 4-9- 2024 அன்று நினைவு கூரப்பட்டது. பொதுவாக ஒருவர் மறைந்த தினம் என்றால் அது ஒரு சோகசம்பவமாக இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், அவர் புகுந்த மண்ணில் தமிழ் இனத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி அதிபரின் பிறந்த தினத்திலன்று ஒவ்வொரு வருடமும் இங்குள்ள நண்பர்கள், பழைய மாணவர்கள், மற்றும் குடும்பத்தினரால் நினைவு கூரப்படுகின்றது.










