கனடாவிற்கு புலம்பெயர்ந்த நிலையில் தனது 87 ஆவது வயதிலும் இரண்டாவது முதுகலைப் பட்டம் பெற்று ஆச்சரியப்படவைத்துள்ளார் யாழ்ப்பாணம் வேலணையைச் சேர்ந்த தமிழச்சியான மூதாட்டி .
கனடாவில் வசித்து வரும் யாழ்ப்பாணம் வேலணையை பூர்விகமாக கொண்ட வரதா சண்முகநாதன் (87) என்பவரே யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University) தனது இரண்டாவது முதுகலைப்பட்டத்தைப் பெற்றுள்ளார்.