அதிபர் பொ. கனகசபாபதி கனடாவில் நினைவுகூரப்பட்டார்

மகாஜனக் கல்லூரி முன்நாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த 10 வது ஆண்டு நினைவுநாள் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் 4-9- 2024 அன்று நினைவு கூரப்பட்டது. பொதுவாக ஒருவர் மறைந்த தினம் என்றால் அது ஒரு சோகசம்பவமாக இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், அவர் புகுந்த மண்ணில் தமிழ் இனத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி அதிபரின் பிறந்த தினத்திலன்று ஒவ்வொரு வருடமும் இங்குள்ள நண்பர்கள், பழைய மாணவர்கள், மற்றும் குடும்பத்தினரால் நினைவு கூரப்படுகின்றது.


ரொறன்ரோ வாழ் பன்முகக் கலைஞர் ‘பாரதி ஆர்ட்ஸ்’ மதிவாசன் அவர்களின் இயக்கத்தில் செப்டம்பர் 28 அன்று திரைக்கு வரவுள்ள ‘ஆக்குவாய் காப்பாய்’

கடந்த 23-08-2024 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ‘ஆக்குவாய் காப்பாய்’ திரைப்படத்தின் அறிமுக வைபவத்தில் ‘பாரதி ஆர்ட்ஸ்’ மதிவாசன் அவர்களின் அழைப்பை ஏற்று அனைவரும் அங்கு கலந்து கொண்டனர். நிகழ்வில் ஆரம்ப உரையாற்றிய மதிவாசன் அவர்கள் பின்வருமாறு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். ‘உலகில் பல நாடுகளில் வாழும் எமது தமிழ் மக்கள் மத்தியிலிருந்து தொடர்ச்சியாக பல திரைப்படங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் கனடாவிலும் அதற்கு விதி விலக்காக இருக்காமல் பல கலைஞர்கள் தொடர்ச்சியாக இந்த திரைப்படத்துறையில் இயங்கிவருகின்றார்கள்.


கியூபிசக் கோட்பாட்டை முன்வைத்து ‘என்ன சொல்லப் போகிறாய்?’

நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுதான் ‘சூம்’ என்று சொல்லப்படுகின்ற மெய்நிகர் நிகழ்வாகும். பல்வேறு நாடுகளில் இருந்தும், பலரும் பங்கு பற்றக்கூடியதாகவும் இது அமைக்கப்பட்டிருக்கின்றது. சென்ற சனிக்கிழமை யூன் 15 ஆம் திகதி இலக்கியவெளி குழுவினர் சர்வதேச ரீதியாக இலக்கியம் சார்ந்து நடத்திய மெய் நிகர் நிகழ்வு ஒன்று இடம் பெற்றிருந்தது. கோவிட் காரணமாக வெளிவராத நூல்கள் பற்றிய திறனாய்வுகளும், கருத்துப் பரிமாற்றங்களும் கனடிய தமிழ் இலக்கியத்தின் துரித வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது.


கனடாவில் கோவிலூர் செல்வராஜனின் நூல் வெளியீடு

தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பெற்ற எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜன் அவர்களின் நூல்கள் வெளியீட்டு மற்றும் அறிமுகவிழா சென்ற மே மாதம் 25 ஆம் திகதி 2024  அன்று கனடா ஸ்காபறோ நகரில் உள்ள பைரவி நுண்கலை மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் மேற்படி விழாவிற்கு தற்போதைய தலைவரும் கவிஞருமான அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.


கனடா, ரொறன்ரோவில் கலைஞர்களுக்கு மதிப்பளிப்பு!

முத்தமிழ் என்று அழைக்கப்படுகின்ற இயல், இசை, நாடக வடிவங்களைக் கட்டிக் காப்பதில் புலம் பெயர்ந்து கனடா வந்த ஈழத்தமிழர்கள், வேலைப் பளுவுக்கு மத்தியிலும் மிகவும் ஆர்வத்தோடு அத்துறையில் ஈடுபட்டார்கள். தொடக்கத்தில் பொருளாதார ரீதியாகத் தங்களைத் தாங்களே நிலை நிறுத்திக் கொள்வதில் கஸ்டங்களை அனுபவித்தாலும், தங்களுடன் ஒன்றாக இணைந்த கலை வடிவங்களைப் புலம் பெயர்ந்த மண்ணில் வெளிக் கொண்டுவருவதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை.


கனடாவில் நடந்த ‘நூல்களின் சங்கமம்’ புத்தகக் கண்காட்சி

சென்ற சனிக்கிழமை 20-4-2024 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாகவும், உலகப்புத்தகத் தினத்தைக் கொண்டாடும் முகமாகவும் ரொறன்ரோவில் கனடியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டும், விற்பனைக்கும் கனடியத் தமிழ் எழுத்தாளர் இணையத்தால் வைக்கப்பட்டிந்தன. கனடாவின் பல பாகங்களில் இருந்தும் மிகப் பெரிய அளவில பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வுக்கு ஆதரவு நல்கினார்கள். முக்கியமாக இளையதலைமுறையினரும், சிறுவர்களும் பெற்றோருடன் வந்து கலந்து கொண்டு தமக்கு விரும்பிய நூல்களை வாங்கிச் சென்றது குறிப்பிடத் தக்கது.


கனடாவில் செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை

செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை சித்திரை மாதம் 6ம் திகதி சனிக்கிழமை கனடா, மார்க்கத்தில் அமைந்துள்ள கலைக்கோவில் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. சலங்கைப்பூசை என்று சொல்வதைவிட, எமது இளைய தலைமுறையினருக்கு எமது பாரம்பரிய கலைகளை அறிமுகம் செய்யும் ஒரு நிகழ்வாகவே இது இருந்தது.  “வளரும் பயிரை முளையிலே தெரியும்” என்பதற் கிணங்க  அகவை எட்டு நிரம்பிய அதிசா தனது மூன்று வயதில் இருந்து கலைக்கோவில் நடன ஆசிரியை நாட்டியக் கலாநிதி ஸ்ரீமதி வனிதா குகேந்திரனிடம் நடனத்தைச் சாத்திர முறைப்படி கற்று வருவது குறிப்பிடத்தக்கது.


கவிஞர் வி. கந்தவனம் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்குப் பேரிழப்பாகும்.


கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்கு, குறிப்பாகக் கனடிய மக்களுக்குப் பேரிழப்பாகும். காங்கேசந்துறையில் நடக்கும் இலக்கிய விழாக்களில், மாணவப்பருவத்தில் குறிப்பாகப் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவற்றில் கவிஞரைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் இங்கே கனடாவில் அதிபர் பொ. கனகசபாபதி வீட்டில்தான் இவரை முதலில் சந்தித்தேன். உதயன் சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கம் கிடைத்தபோது என்னை அழைத்து வாழ்த்தியிருந்தார். அதன்பின் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக எனக்கு ஒரு பதவியையும் பெற்றுத் தந்தார். அதன் பின்தான் வரவேற்புரையோ அல்லது நன்றியுரையோ மேடையில் ஏறிச் சொல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.


ஈழத்து கலைஞர்களின் படைப்பில் உருவான “டக் டிக் டோஸ்”

கடந்த வாரம் கனடா ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள WOODSIDE CINEMA திரையரங்கில் எமது கலைஞர்களின் படைப்பில் உருவான ” டக் டிக் டோஸ்” திரைப்படம் மதியம் 1.00 மணிக்கு பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டது. நிகழ்வில் திரையரங்கின் ஆசனங்கள் முழுவதும் பார்வையாளர்களால் நிறைந்து காணப்பட்டது ஈழத்து கலைஞர்களின் படைப்பை ஊக்குவிப்பதற்கான கனடா வாழ் தமிழ் மக்களின் பேராதரவாகும். நிகழ்வில் “புத்திகெட்ட மனிதர் எல்லாம்” படத்தில் சைந்தவி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்த சிந்துஜா அவர்கள் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு தனது அனுபவங்களை வழங்கியிருந்தார்.


தமிழன் வழிகாட்டி செந்தியின் “செந்தீ” குறும் திரைப்படம்

ஈழத்து திரைப்பட வரலாற்றில் வெற்றி படங்களின் வரிசையில் ‘செந்தீ” குறும் திரைப்படம் Rameshwaram International Film Festival வழங்கிய ‘GOLDEN SHELL AWARDS” பெற்றுக் கொண்டது.
கதை, வசனம், இயக்கம், பாடல்,
தயாரிப்பு அனைத்திற்கும் கனடிய வர்த்தக கைநூலான ‘தமிழன் வழிகாட்டி” வெளியீட்டாளர் செந்திலாதன் ‘செந்தி” உரியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.