மேலைக்கரம்பொன் அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்-2022

மேலைக்கரம்பொன் பதியில் வேண்டும் வரங்களை வாரிவழங்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகமூர்த்தி சுவாமியின் வருடாந்த மகோற்சவம் மங்களகரமான சுபகிருது வருஷம் ஆடி மாதம் 3ம் நாள் (19-07-2022) செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துத் தினங்கள் நடைபெற்று, 11ம் நாள் (27-07-2022) புதன்;கிழமை தேர்த்திருவிழாவும் 12ம் நாள் (28-07-2022) வியாழக்கிழமை எம்பெருமானுக்குத் தீர்த்த உற்சவமும் நடைபெற்றது. இவ் உற்சவ காலங்களில் அடியார்கள் விரதம் அனுஷ்டித்து ஆசார சீலராய் ஆலயத்திற்கு வருகை தந்து ஸ்ரீ முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றனர்!


இன்று ஆஞ்சநேயரின் வாரதினமான சனிக்கிழமையுடன் கூடிய ஹனுமான் ஜயந்தியும், சித்திரை பௌர்ணமியும்!

Aanjaneyar8aஆஞ்சநேயரின் வாரதினமான சனிக்கிழமையுடன் கூடிய ஹனுமான் ஜயந்தியும் அத்துடன் சேர்ந்த சித்திரை பௌர்ணமி தினமான இன்று கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில்ஸ்ரீசுயம்பு ஆஞ்சநேயருக்கு செந்தூரம் இட்டு , 108 வடை மாலை, வெற்றிலை மாலை, அவரின் வாலைச்சுற்றி துளசி மாலை அணிவித்தும், நாற்பது புகழ்மாலை (ஹனுமான் சலிசா) பாடி, 108 போற்றிகளுடன் பூசை வழிபாடும் சிறப்பாக நடைபெற்றன.ஸ்ரீபொன்சாயிக்கு ஆராத்தியுடன் உழுந்துப் பிரியன் ஹனுமானின் இட்டலியும் பிரசாதமாக அடியவர்களுக்கு வழங்கப்பட்டன.


கரம்பொன் கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று சித்ரா பௌர்ணமி தினத்தில் நடைபெற்ற அபிஷேகமும்  அன்னதான நிகழ்வும்! 

கண்ணகி அம்மன் பௌர்ணமி1cகரம்பொன் கிராமத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் கண்ணகி அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று 16-04-2022  சனிக்கிழமை விசேஷ பூஜைகளுடன் அபிஷேகமும்  அன்னதான நிகழ்வும்; சிறப்பாக நடைபெற்றது.
சித்ரா பவுர்ணமி என்பது சித்திரை மாதம் பவுர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் சித்ரா பவுர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேஷ ராசியில் (சித்திரை மாதத்தில்) வரும் பவுர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது.


கரம்பொன் மக்களால் அழைக்கப்பட்ட ‘பொன்னர் வளவு’ ஸ்ரீ பொன்சாயி மாதிரிக் கிராமமாக குருவருளால் உருவாகவுள்ளது

கரம்பொponsaaji village1aன் மக்களால் அழைக்கப்பட்ட 'பொன்னர் வளவு' ஸ்ரீ பொன்சாயி மாதிரிக் கிராமமாக குருவருளால் உருவாகவுள்ளது. புதுவருடப் பிறப்பை முன்னிட்டு இன்று 13-04-2022 புதன்கிழமை சுருவில் வீதி, கரம்பொன் தென்கிழக்கு ஊர்காவற்றுறை J53 பிரிவில் அமைந்துள்ள 25 பரப்புடைய இக்காணி காணியற்ற கரம்பொன் குடிமக்களான பத்து குடும்ப அங்கத்தவர்களுக்கு (அரசாங்க வீட்டுத் திட்டத்திற்காக) பிரித்து குலுக்கல் சீட்டு முறையில் பாரபட்சமின்றறி வழங்கப்பட்டன. 


பக்தி பூர்வமாக நடைபெற்ற ‘கரம்பொன் ஸ்ரீ சுயம்பு ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்’ 

கரம்பொன் ஸ்ரீ சுயம்பு ஆஞ்சநேயர்கரம்பொன் ' ஸ்ரீபொன் சாயி' தொண்டர் சேவையின் முன்னோக்கி நகரும் செயல் திட்டத்தின் கீழ் இன்று 23-03-2022 புதன் கிழமை கரம்பொன் சுருவில் வீதியில் அமைந்துள்ள கரம்பொன் ஸ்ரீ சுயம்பு ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் நல்லூர் ' யாழ் மத்தி ஸ்ரீ பகவான் சத்திய சாய் சேவா நிலையத்திலிருந்து சிவாச்சாரியார்கள் சகிதம் பக்தர்கள் புடை சூழ சுருவில் வீதி வழியாக மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, சுயம்பு ஆஞ்சநேயர் பிரதிஷ்டா, கும்பாபிஷேகம் குருவருளாலும் இறையருளாலும் மிகச் சிறப்பாக நடைபெற்றென.


கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வு 2022!

Pongal 2022கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயத்தில் கரம்பொன் வாழ் மக்களால் தைமாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை பொங்கல் நிகழ்வு ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தச் சிறப்பு விழா ஒரு கலைவிழாபோல், தமிழ்மரபுத் திங்கள் அடையாளங்களை உள்ளடக்கியதாக, மிளிர்ந்தது என்றால் அது மிகையில்லை.; கரம்பொன் வாழ் மக்களும் அவர்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பொங்கலை உண்டு மகிழ்ந்தனர்.


உலகின் தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான 2021 விருது பெற்ற யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.இ.இரமணன்

2021 ம் ஆRamanan1aண்டிற்கான தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான BIC Cristal Pen விருதினை யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.இ.இரமணன் பெற்றுக் கொண்டுள்ளார்.

விசேடமாக கொவிட் -19 இடர் காலத்தில் தலை சிறந்த அர்ப்பணிப்புடன் எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி கற்பித்தலில் புத்தாக்க முறைமைகளைப் புகுத்தி நிகழ்நிலை கற்பித்தலில் மாணவர்கள் வெற்றிகரமாக ஈடுபடுவதற்கான வழிவகைகளைக் கையாண்டு மாணவர்களை கல்வியின் பால் தூணடுவதன் மூலம் மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் கல்விப் பணியாற்றியமைக்காகவும் உலகின் அனைத்து தமிழ் மாணவர்களும் பயன்பெறும் வண்ணம் இலவசமாக ஆசிரிய பணியினை முன்னெடுத்தமைக்காகவும் வழங்கப்படுகிறது.


நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல்

நவீன JHC Thidal1aவசதிகளுடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் இன்று வெள்ளிக்கிழமை (12) காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களால் இலத்திரனியல் ஸ்கோர்போட் ,விளையாட்டு வீரர்களுக்கான அறைகள், பயிற்சிகளுக்கான இடம், மைதான பராமரிப்பு போன்ற வசதிகளுடன் 55 மில்லியன் ரூபா செலவில் இந்த நவீன விளையாட்டு திடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுத்திடலானது வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலேயே மிகவும் நவீனகரமான ஒரு மைதானமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


மேலைக்கரம்பொன் அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்-2021


murugan1aஸ்ரீ முருகன் அடியார்களே!
திருமூலரால் சிவபூமியென போற்றப்பட்டதும், தேவாரப் பாடல் பெற்றதும், பஞ்ச ஈஸ்வரங்களை தன்னகத்தே கொண்டதுமான இலங்கைத் திருநாட்டின் வடபால் தீவகத்தின் ஊர்காவற்றுறை மேலைக்கரம்பொன் பதியில் வேண்டும் வரங்களை வாரிவழங்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகமூர்த்தி சுவாமியின் வருடாந்த மகோற்சவம் நிகழும் மங்களகரமான பிலவ வருஷம் ஆடி மாதம் 14ம் நாள் (30-07-2021) வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அமிர்தயோகமும் ரேவதி நட்சத்திரமும் சப்தமி திதியும் கூடிய சுபவேளையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துத் தினங்கள் நடைபெற்று ஆடியமாவாசையில் எம்பெருமானுக்குத் தீர்த்த உற்சவமும் நடைபெறும்.


ஊர்காவற்றுறை வைத்தியசாலை உணவுக்கூட (Canteen) திறப்புவிழா!

Hospital canteen1aஇன்று 02-04-2021 வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை வைத்தியசாலை உணவுக்கூட (Canteen) திறப்புவிழா ஸ்ரீவைரவப்பெருமானின் பூசையுடனும், ஆசியுடனும் ஆரம்பமானது. எல்லோரும் பசியாறும் வசதிகளைக் கொண்ட உணவுக்கூடம் வடக்கு Road ஊர்காவற்றுறை பண்ணை வீதி வைத்தியசாலை ஸ்ரீவைரவர் சந்நிதியின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள், வைத்தியசாலை பணியாளர்கள், நோயாளர்கள் என தனித்தனியாக அமர்ந்து உணவு உட்கொள்ளும் வகையில் சுகாதார முறைப்படி உணவுக்கூடம் பிரித்து (separated) அமைக்கப்பட்டுள்ளது.