கடந்த வாரத்தில் சனிக்கிழமையும் (10-10-2015), ஞாயிற்றுக்கிழமையும் (10-11-2015) இரண்டு நாள் நிகழ்வாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்திய கலை, கலாச்சார நிகழ்வான கலையரசி -2015 மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் சபையோர் பாராட்டும் வகையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வுகள்
எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினைந்தாவது இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோவில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது பா. ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நவீனத் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் திரு ஜெயமோகன் அவர்கள் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் விமர்சனங்கள், நாடகங்கள், சினிமா என பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார். அச்சமயம் அவருடனான ஓர் இலக்கிய கலந்துரையாடலை ரொறன்ரோ தமிழ் சங்கம் நடாத்தியிருந்தது.
பச்சிளம் பாலகியின் பரவசமான பரத நாட்டிய அரங்கேற்றம்! – வீரகேசரி மூர்த்தி
ஒன்பது வயதுச் சிறுமியான செல்வி அபிஷா செல்வமோகனின் பரத நாட்டிய அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கும் அரிய வாய்ப்பு அண்மையிலே கிடைத்தது. பத்தோடு பதினோராவது அரங்கேற்றமாக இருக்குமென எண்ணிக் கொண்டு சென்ற எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. எனக்கு மாத்திரமல்ல ஏனைய அனைவருக்குமே ஆச்சரியமாகத் தான் இருந்தது என்பதனை அவர்களது பலத்த கரகோஷங்களின் மூலம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
யுனைரெட் விளையாட்டுக்கழகம் நடாத்திய – பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி
ஓன்பதாவது ஆண்டு நிறைவையொட்டி United Tamil Sports Club நடாத்திய Badminton சுற்றுப் போட்டி கடந்த 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுரோவில் அமைந்துள்ள Malvern GYM இல் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் பெரியவர்களென பல பிரிவுகளில் போட்டி காலை 9.30 மணி தொடக்கம் இரவு 10.00மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டி முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டன. வருடாவருடம் தவறாமல் யுனைரெட் விளையாட்டுக்கழகம் இப் பூப்பந்தாட்டப் போட்டியை நடாத்தி வருவது பாராட்டுதற்குரியது.
ரொறன்ரோவில் திருவையாறு-2015
தமிழ்ப் பண்பாட்டு மேம்பாட்டு ஒன்றியம் – கனடா
Tamil Cultural Progressive Organization – Canada (TCPO-CAN)
பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் 2011 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப் பண்பாட்டு மேம்பாட்டுஒன்றியம் – கனடா என்ற அமைப்பு ரொறன்ரோவில்,தமிழர் பண்பாட்டு நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பான முறையில் நடத்திக் கொண்டு வருவதை வாசகர் அறிந்திருப்பார்கள். இவ்வமைப்பு ரொறன்ரோவில் முதன் முதலாக திருவையாறு நிகழ்ச்சியை மார்ச். 01, 2014 நடத்திச் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது. அதன் தொடச்சியாக இவ்வாண்டும் இரண்டாம் முறையாக ரொறன்ரோவில் திருவையாறு நிகழ்ச்சியை 28.03.2015 ஸ்காபரோவிலுள்ள பெரிய சிவன் ஆலய கலாச்சார மண்டபத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் நடத்தினர்.
ஞானம் சஞ்சிகையின் “ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்” அறிமுக விழா
இன்று ஞானம் தனது 175 இதழாக வெளியிட்டிருந்த சிறப்பு இதழான 'ஈழத்துப்புலம் பெயர் இலக்கியச் சிறப்பிதழின் வெளியீட்டு விழா 'டொராண்டோ'வில் நடைபெற்றது. கனடாத்தமிழ்ச்சங்க ஆதரவில் வைத்திய கலாநிதி லம்போதரனுக்குச்சொந்தமான 'டொராண்டோ' தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில். எழுத்தாளர் அகில் தொடக்கவுரையினையும், வைத்திய கலாநிதி இ.லம்போதரன் தலைமையுரையினையும் ஆற்ற அறிமுக உரையினைப் பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன் ஆற்றினார். அதன்பின்னர் நூல் நிகழ்வுக்கு வந்திருந்தோருக்கு விற்பனைக்கு விடப்பட்டது. தொடர்ந்த நிகழ்வில் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரையினையும், இறுதியாக நன்றியுரையினை எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திராவும் ஆற்றினார்கள்.
தனக்கென தனிப்பாதை வகுத்து துளிர் விடும் “தளிர்” சஞ்சிகை!
“தளிர்” ஆண்டு விழாவில் டாக்டர் போல் ஜோசெப்
“தளிர் சஞ்சிகை தனக்கென தனிப்பாதை வகுத்து, சவால்களை சாதனையாக்கி வெற்றிகரமாக வெளி வந்து ஓராண்டினை நிறைவு செய்துள்ளது. அதன் ஆசிரியர் சிவமோகனும், துணைவியார் நந்தினியும் நீ பாதி, நான் பாதியென சிவசக்தியாக ஒன்றிணைந்து செயலாற்றி வருவது பாராட்டுக்குரியதாகும். கலாநிதி பாலசுந்தரம், கதிர் ஒளி ஆசிரியர் திரு.போள் ராஜபாண்டியன், டாக்டர் கென் சந்திரா, வீடு விற் பனை முகவர் திரு.சங்கர் மாணிக்கம் ஆகியோரது பேராதரவினால் “தளிர்” மேலோங்கி வருகின்றது.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது விழா-2015
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதைக் கனடாவின் மூத்த தமிழ் இலக்கிய முன்னோடிகளான அமரர் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்களுக்கும் கவிஞர் திரு. வி. கந்தவனம் அவர்களுக்கும் வழங்கிக் கௌரவித்தது. சென்ற ஞாயிற்றுக் கிழமை (14-03-2015) ஸ்காபரோ சிவிக்சென்ரர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பாக அன்று நடைபெற்ற வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் இணையத்தின் உபதலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தனின் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.அவரது வரவேற்புரையில் இருந்து ஒரு பகுதியை இங்கே தருகின்றோம்.
வெகு விமரிசையாக இடம்பெற்ற கனடா உதயனின் 9 ஆவது சர்வதேச விருது வழங்கும் விழா
கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் நடத்தும் 9 ஆவது சர்வதேச விருது வழங்கும் விழா நேற்று மாலை கனடா ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள மார்க்கம் கொன்வென்சன் மண்டபத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
குறித்த விருது விழாவில் வழங்கப்பட்ட ஆறு விருதுகளில் இரண்டு வெளிநாடுகளில் வாழும் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
கனா ஆறுமுகம் நடாத்திய “நினைவுகள் 2015”
கனா ஆறுமுகம் நடாத்திய 2015ம் ஆண்டுக்குரிய “நினைவுகள் 2015”
கனடாவில் நினைவுகள்.கொம் என்றால் நம் எல்லோர் மனங்களிலும் உடனே பதிவாகுவது அதன் அதிபர், ஸ்தாபகர் திரு.கனாவின் முகமே!!. இந்த நினைவுகள் அதிபர் திரு.கனா ஆறுமுகம் அவர்கள் நடாத்திய 2015ம் ஆண்டுக்குரிய “நினைவுகள் 2015” என்னும் அட்டகாசமான விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடக்கம் ஸ்காபுரோவில் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.