அனைவருக்கும் (Happy New Year 2025) இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்த புத்தாண்டு அனைவர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பெரு மகிழ்ச்சி, மன அமைதி பல்கிப் பெருகட்டும். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். சமத்துவம் தழைக்கட்டும். அறம் வெல்லட்டும்,


சொற்கோ வி.என்.மதிஅழகன்- தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு ” நூல் அறிமுக விழா

தமிழ்பேசும் நல்லுலகத்தின் புகழ்பூத்த பெரும் தமிழ் அறிவிப்பாளர் திரு வி.என்மதியழகன் அவர்களின் “சொற்கோ வி.என்.மதிஅழகன்- தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு ” நூல் அறிமுக விழா கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் ஸ்காபறோ நகரசபை மண்டபத்தில் இணையத்தின்
தலைவர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமையில் இருபத்திமூன்றாம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 01:30 மணிக்கு தமிழர்களால் நிறைந்து வழிந்த ஒன்றாக வெற்றிகரமாக
நடைபெற்றது.


உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில்!

உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகள் பட்டியலை தற்போது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ளது.

உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது என்று கேட்டால் பலரும் அமெரிக்கா, இங்கிலாந்து என பதிலளிப்பார்கள்.

ஆனால் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் பின்னுக்கு தள்ளி பல நாடுகள் கல்வி அறிவில் முன்னிலை வகிக்கின்றன.


அனைவருக்கும் (Happy New Year 2024) இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஆங்கில புத்தாண்டு உலகில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வரவேற்கும் ஒரு இனிய நாளாகும். குறிப்பிட்ட மக்கள் மட்டும் இதனை வரவேற்பார்கள் என்று நாம் சொல்ல முடியாது. அனைத்து மக்களும் ஆவலாக அவர்களுடைய புது வருடத்தின் நாளை வரவேற்க தயாராக காத்திருப்பார்கள்.


கரம்பொன் அருள்மிகு சீரடி சாய்பாபா ஆலய விசேஷ பூஜைகள்

கரம்பொன் சுருவில் வீதியில் ஸ்ரீ பொன் சாயியாக வீற்றிருக்கும் சீரடி சாயி ஆலயத்தின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றி லண்டனில் வசித்து வரும் திருமதி. கமலா பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆலயத்திற்கு சென்று ஆலயத்தின் மகிமை பற்றி விபரமாக உரையாற்றினார். இன்று கரம்பொன் சீரடி சாயி இல்லத்திலே ஸ்ரீ பொன்சாயி தொண்டர்களின் சேவையானது மிகவும் சிறப்பான ஒன்றாக அமைகிறது.


‘விலா கருணா’ மூத்தோர் இல்லம் நடத்திய ‘சந்தியாராகம்’ சுப்பர் சிங்கர் போட்டி நிகழ்ச்சி

கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவருபவதுடன் தமிழ் பேசும் மூத்தவர்களின் உடல் நலம் குன்றிய நாட்களில் அவர்களைப் பராமரிக்கும் அற்புதமான மனித நேயப் பணியை மேற்கொண்டு வரும் திருமதி இந்திராணியின் ‘விலா கருணா’ மூத்தோர் இல்லம் நடத்திய ‘சந்தியாராகம்’ சுப்பர் சிங்கர் போட்டி நிகழ்ச்சி கடந்த 16ம் திகதி சனிக்கிழமை ஒன்றாரியோ இசைக் கலா மன்றத்தின் கலா மண்டபத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


கரம்பன் திருமதி சாரதா பரநிரூபசிங்கம் அவர்கள் எழுதிய “ அம்மு அம்மாவுக்குச் சொன்ன” நூல் வெளியீட்டு விழா 2023

கடந்த ஞாயிறு 22/01/2023 அன்று மேலைக் கரம்பனைச் சேர்ந்த திருமதி சாரதா பரநிரூபசிங்கம் அவர்கள் எழுதிய “ அம்மு அம்மாவுக்குச் சொன்ன” என்று தலைப்பிட்ட கவிதை நூல் ஸ்கார்புரோ ஒன்ராறியோ கனடாவில் வெளியீடு கண்டது. அமானா மகாநாட்டு மண்டபத்தில் நூற்றுக்கும் அதிகமான பார்வையாளர்களும் , அபிமானிகளும் கலந்துகொண்டிருக்க விழா வெகுவிமரிசையாக ஆரம்பித்தது.


யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் சாதனை

கல்வி பொது தராதர சாதராண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியதை தொடர்ந்து யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் 99 சதவீதம் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனைப்படைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற 11வது ஆண்டு துடுப்பாட்டப்போட்டி!

JHC & CHC 2022-1aஇந்துக்களின் பெரும்சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரிக்குமிடையிலான 11ஆவது துடுப்பாட்ட போட்டி சமநிலையில் முடிவுற்றது.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டிகள் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் இடம்பெற்றன.


கரம்பொன் சீரடி சாயி இல்லத்தின் தமிழ் புதுவருட கொண்டாட்டமும், நன்றி வழங்கலும்!

Araneri students-1bகரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் தமிழ் புதுவருட தினமான இன்று 14-04-2022 வியாழக்கிழமை பக்தர்கள் கூடி சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். அத்துடன் திருவாளர் சோமசுந்தரம் கனகநாதன் (குமரன்) அவர்கள் தான் பிறந்த கரம்பொன் ஊரின் வளர்ச்சிக்காக கனடாவிலிருந்து சென்று சாயி தொண்டாற்றிய அவரது சேவைக்காக குழந்தைகளும் ஏன் பெரியவர்களும் கூட எங்கள் 'சாயி அப்பா' என வாழ்த்தி அவருக்கு நன்றியுரை கூறி, மீண்டும் மீண்டும் கரம்பொன் சீரடி சாயி இல்லத்திற்கு வருகை தந்து தங்களுக்கு அன்பு வழிகாட்டும்படி வேண்டி பயணம் அனுப்பி வைத்தார்கள்.