மைனாவும் கோழியும்

mainaKoliகுப்பையைக் கிழறிக் கொண்டிருந்த கோழி மர இடுக்கில் இருந்த ஒரு கூட்டைக் கண்டது. அந்தக் கூட்டை எட்டிப் பார்த்தது. அதற்குள் சில முட்டைகள் கிடந்தன. அதைப்பார்த்த கோழிக்கு இரக்கம் உண்டாயிற்று. அந்த முட்டைகளின் மேலே உட்கார்ந்து அவற்றை அடைகாக்கத் தொடங்கிற்று.

இதை மரத்தின் மேலே இருந்த ஒரு மைனாக் குருவி பார்த்துக் கொண்டிருந்தது.

கோழி அடைகாக்கத் தொடங்கியதும் அதன் அருகே பறந்து சென்றது மைனா. உரத்தகுரலில் கோழியிடம் கூறிற்று:


கரடியின் வால் ஏன் குட்டையாய் இருக்கிறது?

கரடியை உங்களில் பலரும் மிருகக் காட்சிச் சாலையில் பார்த்திருப்பீர்கள். கறுப்பான, கனமான தோற்றமுள்ள பிராணி அது. அதன் வால் மிகவும் குட்டையாகவே இருக்கும். அதற்கு ஒரு கதையும் இருக்கிறது.

ஒருநாள் நரி ஒன்று, யாரோ பிடித்த மீன்களை திருடி எடுத்துக் கொண்டு வந்தது. அதை ஒரு கரடி கண்டுவிட்டது. நரி அந்த மீன்களை தானே பிடித்து வருவதாகவும், மீன் பிடிப்பது வெகு இலகுவானது என்றும் கரடிக்கு கூறிற்று.


புத்தியுள்ள சேவல்

சேவலும், நாயும் நல்ல நண்பர்கள். இரண்டும் காட்டு வழியே நடந்து சென்றன. அப்போது இருட்டிப்போயிற்று. எனவே மேற்கொண்டு பயணம் செய்யாமல் ஒரு மரத்தடியில் அவையிரண்டும் தங்கிப்போக நினைத்தன.

சேவல் வழக்கம்போல மரக்கிளையில் ஏறிக்கொண்டது. நாயோ மரத்தடியில், வேர் ஒன்றின் ஓரமாகப் படுத்தது. சற்று நேரத்தில் இரண்டும் உறங்கிப் போனது.


லூட்ஸ் மாதா..

        லூட்ஸ் மாதா கோயில் மணி
        ஓசை கேட்டேன்
        கோயிலிலுள்ளே மெழுகுவர்த்தி
        எரியக் கண்டேன்
        மெழுகுவர்த்தி ஒளியில் அவள்
        முகத்தைக் கண்டேன்
        லூட்ஸ் மாதா முகத்தில் அருட்
        சிரிப்பைக் கண்டேன்.


வேளாங்கணி அம்மை..

        ஆழக் கடலின் அலையோசை
        அன்பு தெறிக்கும் மணியோசை
        அம்மையின் அற்புத அருளோசை
        அமைதி நாடும் அடியோசை
        அன்பர் தம் காலின் தனியோசை
        அன்னையின் நிழலில் ஆறுதலை
        அடைந்து நிற்பவர் பேறுகளை
        எண்ணிட நாமும் முடியாது
        ஏற்றுவோம் வேளாங்கணித்தாயை.


எப்போ தோன்றின?

        பரந்த வெளிகள்
        அகண்ட ஆகாயம்
        நீண்ட நதிகள்
        நிரம்பும் காற்று
        உயர்ந்த மலைகள்
        உள்ளாழக் கடல்கள்
        உருளும் சமுத்திரம்
        உவமையில் மீன்கள்


மனித மனம்

        மதுவுண்டு மயங்குகின்ற தேனீயாகும்
        மதுவையே சுவைக்காத ஈயுமாகும்

        பாடியே பறக்கின்ற குயிலுமாகும்
        பாடாது வட்டமிடும் பருந்துமாகும்

        மழையினையே பொழிகின்ற முகிலுமாகும்
        மக்கள் தமை வாட்டுகின்ற வெப்பமாகும்

        பற்றைதனில் ஒளிக்கின்ற முயலுமாகும் 
        பயமின்றித் தாவி வரும் சிங்கமாகும்


இவ்வுலகம் பொன்னுலகம்

        வற்றாத நீருற்று
        வரட்சி இல்லாப் பூஞ்சோலை
        தென்றல் விளையாடும்
        தென்னை மரத்தோட்டம்
        வாழை இளஞ்சோலை
        வளமுள்ள மாங்காடு
        முந்திரிகைப் பந்தல்
        முதிர்ந்த பழக்குலைகள்


பலன் கருதாப் பண்பு வேண்டும்

        ஒளவைக் கிழவி அருமூதாட்டி
        அன்றோர் நாளில் அரும்பிய சொற்கள்
        இன்று என் நினைவில் எழுபவையாகும்
        எவ்விடமாயினும் எங்கெங்கிருப்பினும்
        பண்புடன் நாமும் பயன்தரும் வினைகளை
        ஏற்றமாக இயற்றிடுவோ மெனில்
        பலன் கருதாத பண்பைப் பெற்று
        பணிவுடன் வாழப் பழகிடுவோமெனில்


பழங்களும் காய்கறியும்

        பழங்களும் காய்கறியும்
        பல கதைகள் சொல்லும் 
        பட்டகதை தொட்டகதை
        பலருடனே நெரிந்தகதை
        பெட்டிகளில் அடைபட்டுப்
        பேரவலப் பட்ட கதை
        கெனியாவில் வாழ்வெடுத்துக்
        கென்ரனுக்கு வந்த கதை
        இந்திய மண்ணில் 
        எழிலாய் வளர்ந்தகதை