கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் இராம நவமி (பாபாவின் அவதார நாள்) இன்று 19-04-2024 வெள்ளிக்கிழமை இரவு கரம்பொன் திரு வீதி ஊர்வலமும் பூசை வழிபாடும் சிறப்பாக நடைபெற்றன. பக்தர்கள் கூடி சந்தோஷமாக இந்நிகழ்வை பக்தி பூர்வமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். கரம்பொன் கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பல அரிய பணிகளைச் செய்து வரும்; ” ஸ்ரீபொன் சாயி” குழுமத்தினரையும் அத்துடன் இந்நிகழ்வை அழகுற வீடியோ ஒளிப்பதிவு செய்த “ஓம்” தொலைக்காட்சி அமைப்பினரையும் “கரம்பொன்.நெற்” இணையத்தளம் மூலம் உளமாரப் பாராட்டி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எமது கிராமம்
கரம்பொன் அருள்மிகு சீரடி சாய்பாபா ஆலய விசேஷ பூஜைகள்
கரம்பொன் சுருவில் வீதியில் ஸ்ரீ பொன் சாயியாக வீற்றிருக்கும் சீரடி சாயி ஆலயத்தின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றி லண்டனில் வசித்து வரும் திருமதி. கமலா பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆலயத்திற்கு சென்று ஆலயத்தின் மகிமை பற்றி விபரமாக உரையாற்றினார். இன்று கரம்பொன் சீரடி சாயி இல்லத்திலே ஸ்ரீ பொன்சாயி தொண்டர்களின் சேவையானது மிகவும் சிறப்பான ஒன்றாக அமைகிறது.
பலரையும் வியக்கவைத்த கனடா வாழ் யாழ்ப்பாண பெண்மணி வரதா சண்முகநாதன்!
கனடாவிற்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் யாழில் அவருக்குச் சொந்தமாக உள்ள காணியை காணியற்றோருக்கு பகிர்ந்தளித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
யாழில் வேலணை – கரம்பொன் மேற்கை சொந்த இடமாகக் கொண்ட வரதா சண்முகநாதன் என்பவரே தனக்கு சொந்தமான காணியை 9 குடும்பங்களுக்கு தலா 2 பரப்பு வீதம் பகிர்ந்தளித்துள்ளார்.
பகிர்ந்தளிக்கப்பட்டோருக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (18-02-2023) மேலைக் கரம்பொன் முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் அப்பகுதியின் கிராம சேவையாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
கரம்பொன் மக்களால் அழைக்கப்பட்ட ‘பொன்னர் வளவு’ ஸ்ரீ பொன்சாயி மாதிரிக் கிராமமாக குருவருளால் உருவாகவுள்ளது
கரம்பொன் மக்களால் அழைக்கப்பட்ட 'பொன்னர் வளவு' ஸ்ரீ பொன்சாயி மாதிரிக் கிராமமாக குருவருளால் உருவாகவுள்ளது. புதுவருடப் பிறப்பை முன்னிட்டு இன்று 13-04-2022 புதன்கிழமை சுருவில் வீதி, கரம்பொன் தென்கிழக்கு ஊர்காவற்றுறை J53 பிரிவில் அமைந்துள்ள 25 பரப்புடைய இக்காணி காணியற்ற கரம்பொன் குடிமக்களான பத்து குடும்ப அங்கத்தவர்களுக்கு (அரசாங்க வீட்டுத் திட்டத்திற்காக) பிரித்து குலுக்கல் சீட்டு முறையில் பாரபட்சமின்றறி வழங்கப்பட்டன.
கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் நடைபெற்ற ‘இராம நவமி’ நிகழ்வு
கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில இன்று 10-04-2022 ஞாயிற்றுக் கிழமை 'இராம நவமி' நிகழ்வு குருவருளாலும் இறையருளாலும் மிக சிறப்பாக நடைபெற்றென. இந்நிகழ்வில் பக்தர்களின் பஜனைப் பாடல்களுடன் சீரடி சாயிபா மற்றும் ஆஞ்சநேயருக்கும் பூஜைகளுடன் வழிபாடும் நடைபெற்றது. இத்திருக் கோவில் கரம்பொன் மக்கள் யாவர்க்கும் சீரடிபாபாவின் அன்புக் கொள்கையின் ' பாதையில் பேதமின்றி எல்லோருக்கும் சம உரிமையுடன்' தடையின்றி சென்று வழிபட அமைக்கப்பட்டுள்ளது.
மகாளயத்தின் கடைசி அமாவாசை நாளான இன்று 17-09-2020 வியாழக்கிழமை கரம்பொன் சிவன் கோவிலில் மோட்ச அர்ச்சனை நடைபெற்றது
மகாளயத்தின் கடைசி அமாவாசை நாளான இன்று 17-09-2020 வியாழக்கிழமை சிவன் கோவிலில் வம்சாவழியாக இருக்கும் ஜெயராம குருக்களின் சிரேஷ்ட புத்திரன் சந்திர குருக்களால் கரம்பொன் மண் மற்றும் வெளியூர் முன்னோர்களினதும் ஆசி வேண்டி ஊர்காவற்றுறையில் ஈழத்துக் காசிவிஸ்வநாதராக விளங்கும் கணபதீஸ்வரம் சிவன்கோவிலில் மோட்ச அரிச்சனையுடன் பிராமண தர்ப்பணமும் செய்தார்.
சண்முகநாதனின் பொன்னான நாட்கள்…
பதினால் பதிமூன்று?
எண்ணும் எழுத்தும் என எனது பாடசாலை வாழ்வு தொடங்கியது கரம்பொன் சண்முகநாத மகா வித்தியலயத்திலே. அரிவரி, நேர்சரி, பாலர் வகுப்பு என்றெல்லாம் அந்தக் காலத்தில் இருந்ததாக ஞாபகமில்லை. இருந்திருந்தாலும் எனது அம்மா வீட்டில் இருந்ததால் அதற்கெல்லாம் அனுப்பியிருந்திருக்க மாட்டார்கள். நான் வீட்டில் ஆக்கினை கொடுத்தேனோ என்னவோ, என்னை ஐந்து வயதில் பாடசாலையில் சேர்க்க எடுத்த முயற்சி, குறைவயது என்ற காரணத்தால் சரி வரவில்லை.
சண்முகநாத வித்தியாசாலை
கனகரத்தின சுவாமிகள் வழங்கிய காவி உடைதரிக்கும் முன்னதாக கல்விப்பணி மேற்கொள்ள முற்பட்டார். முதற்கண் தம் சொந்த ஊரில் சைவப் பாடசாலை இல்லாத குறையைப் போக்க அயராது முயன்றார். சுவாமிகளின் இடையறாத முயற்சியின் பயனாக கரம்பனைச் சேர்ந்த திருவாளார் ஆ. சோமசுந்தரம், வே. தம்பிப்பிள்ளை, குருநாதர் பொன்னையா, சீனிமுத்து, முருகுப்பிள்ளை, அம்பலவாணர் ஆகியோரின் துணை கொண்டு ஊரிலே வீடுகள்; தோறும் பிடியரிசிக் குட்டான் கொடுத்து இவ்விதம்; சேர்க்கப் பெற்ற அரிசியின் பணத்துடன் குஞ்சரி அம்மாள் நன்கொடையாக வழங்கிய பத்துப் பரப்புக் கொண்ட குஞ்சரி வளவில் 1917ம் ஆண்டளவில் 'சண்முகநாத வித்தியாசாலை' தொடங்கப்பட்டது.
தவத்திரு மகாதேவ சுவாமிகள்
ஈழத்தில் தமிழும், சைவமும் தழைத்தோங்க ஆன்மீகக் குருபரம்பரையொன்று தொடர்ந்து வந்த வண்ணமே இருக்கிறது. சான்றோர்கள் காலத்துக்குக் காலம் அவதரித்து தமிழ்ப்பணியும், சைவப் பணியும் புரிந்து வந்தமையால் சமய அறிவும், தமிழ் அறிவும் வளர்ச்சி பெற்று வந்துள்ளன. அவ்வழியில் வந்தவர்களுள் ஒருவர் ஊர்காவற்றுறை கரம்பொன் ஊரில் அவதரித்த தவத்திரு மகாதேவா சுவாமிகள் ஆவார்.
எமது கிராமம் – கரம்பொன்
ஊர்காவல்துறைக்கு அணித்தாய் உள்ள இடம் கரம்பொன். இதன் பழைய பெயர் கரம்பன் என்பதாகும். கல்வியாளர் இதனைத் திருத்திக் கரம்பொன் என எழுதினர். கரம்பொன் என்ற பெயரே இன்று பெரிதும் வழக்கிலுள்ளது.
இவ்வூரின் கிழக்கிலும், மேற்கிலும் முருகமூர்த்தி கோவில்கள் உள்ளன. கரம் பன்னிரண்டு உடையான் அருள்பாலிக்கும் இடம் இது என்றும், கரம் + பன்னிரண்டு என்ற சொற்களின் அடியாகவே கரம்பன் என்ற இடப்பெயர் தோன்றியது என்றும் விளக்கம் கூறப்பட்டுள்ளது.
இவ்வூரின் தென்எல்லையில் சுருவில், கிழக்கில் நாரந்தனை, வடபால் ஊர்காவல்துறையும் கடலும் அமைந்துள்ளன. இங்கு கிறிஸ்துராசாகோயில், புனித அன்னம்மாள் கோயில், அன்னை வேளாங்கன்னி கோயில், சின்னமடு மாதாகோயில் ஆகியனவும் உள்ளன.