சண்முகநாத வித்தியாசாலை நிறுவிய சன்மார்க்க குரு மகாதேவ சுவாமிகள்!

இயற்கைத் துறைமுகமாய் ஈழத்தின் வடபால்
இருந்து புகழூட்டும் ஊறாத்துறை துறைமுகம்
இயற்கைக் காற்றின் விசையால் இழுபட்டோடும்
இதரநாட்டு பாய்மர வத்தைகள் இக்கரையில்
இரவும் பகலுமாய் இறக்கியேற்றி பண்டங்களை
இலங்கு வணிகத்தில் வரலாறு படைத்ததன்று
இன்றது காவலூரென இனியபெயர் ஈட்டியதே!