இயற்கைத் துறைமுகமாய் ஈழத்தின் வடபால்
இருந்து புகழூட்டும் ஊறாத்துறை துறைமுகம்
இயற்கைக் காற்றின் விசையால் இழுபட்டோடும்
இதரநாட்டு பாய்மர வத்தைகள் இக்கரையில்
இரவும் பகலுமாய் இறக்கியேற்றி பண்டங்களை
இலங்கு வணிகத்தில் வரலாறு படைத்ததன்று
இன்றது காவலூரென இனியபெயர் ஈட்டியதே!