ஆசை வெட்கமறியாதோ..? Valentine Story

(நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள்.

ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது,
மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது.
சரியா பிழையா தெரியவில்லை. )

ழுபது கிலே மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள். இப்படியான முகஅலங்காரங்களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் செய்வது வழக்கம். 


மனம் விரும்பவில்லை சகியே! – காதலர்தினக்கதை (குரு அரவிந்தன்)

Story-Valentine-2019-.நான் கன்னத்தைத் தடவிப் பார்த்தேன்.

‘ஏன் வலிக்கவில்லை?’

‘என்கிட்ட வேண்டாம்’ என்பது போல் அவள் என்னை முறைத்தபடி நகர்ந்தாள். நல்ல காலம் கன்னத்தில் அறையவில்லை. அவள் என்னைப் பார்த்த பார்வை கன்னத்தில் அறைந்தது போல இருந்தாலும் ஏனோ எனக்கு அது வலிக்காத ஒருவித சுகத்தைத் தந்தது.

நான் என்னை மறந்து அவளைப் பார்த்தபடியே நின்றதை அவள் கவனித்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த முறைப்போ என்று நினைத்தேன். நாகரிகம் கருதி நான் அவளை அப்படி வைத்தகண் வாங்காது ஒரேயடியாகப் பார்த்திருக்கக்கூடாது என என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். ஆனாலும் என்ன செய்வது, பொம்மைகளுக்கு நடுவே பொம்மைபோல நின்ற, பிரமிக்கத்தக்க அவளது அழகுதான் என்னை அப்படி வெறித்துப் பார்க்க வைத்தது.


தாழ்பாள்களின் அவசியம் – அ.முத்துலிங்கம்

அம்மாவுக்கு கனடாவில் நம்பமுடியாத பல விசயங்கள் இருந்தன. அதில் மிகப் பிரதானமானது   வீடுகளில் பூட்டு என்ற பொருளுக்கு வேலை இல்லாதது. அம்மாவின் கொழும்பு வீட்டில் அலமாரிக்கு பூட்டு இருந்தது. தைலாப்பெட்டிக்கு பூட்டு இருந்தது. மேசை லாச்சிக்கு பூட்டு இருந்தது. பெட்டகத்துக்கு பூட்டு. வாசல் கதவுக்கு பூட்டு. கேட்டிலே பெரிய ஆமைப்பூட்டு. இப்படியாக பூட்டு மயம்.


முதல் ஆச்சரியம் – அ.முத்துலிங்கம்

ஆப்பிரிக்காவில் எனக்கு ஏற்பட்ட முதல் ஆச்சரியத்தைப் பற்றி சொல்லலாம் என நினைக்கிறேன். இத்தனை வருடங்கள் கழிந்த பின்னரும் அது நினைவிலிருந்து மறைய மறுக்கிறது. சமீபத்தில் அந்த நினைவு வந்தபோது ஏன் இதை எழுதவில்லை என்று யோசித்தேன். ஒருவரும் நம்பமாட்டார்கள் என்பதால் எழுதாமல் விட்டேனோ தெரியவில்லை. அல்லது 2013ம் ஆண்டு பிறந்த பின்னர் எழுதும் முதல் எழுத்தாக இது இருக்கவேண்டும் என்று விதி தீர்மானித்ததால்  இருக்கலாம். என்னவோ, இப்போது சொல்லலாம் என்று தோன்றுகிறது.


ஒன்றைக் கடன்வாங்கு – அ.முத்துலிங்கம்

ஓட்டு வளையத்தை தொட்டுக் கொண்டிருந்தால் கார் தானாகவே ஓடும் என்று நினைக்கும் வயது எனக்கு. எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். ஓர் ஐஸ்கிரீமுக்காக உலகத்தில் எதையும் செய்வேன். ஒரு வட்டக் கிளாஸில் ஐஸ்கிரீமை நிரப்பி அதற்குமேல் மென்சிவப்பு பழம் ஒன்றை வைத்து தரும்போது அலங்காரமாக இருக்கும்; ருசியும் அதிகமாகும். பொய்யும் அப்படித்தான். அதைச் சொல்லும்போது உண்மைத் துளி ஒன்றையும் கலந்துவிட வேண்டும். சிறந்தபொய் அப்படித்தான் உண்டாக்கப்படுகிறது. இந்த உண்மை எனக்கு நாலு வயதிலேயே தெரிந்துவிட்டது. ஒரு பொய் சொல்வதில் ஏற்படும் திரில்லும், வேடிக்கையும், விளையாட்டும் மகிழ்ச்சியும் எனக்கு வேறு எதிலும் கிடைப்பதில்லை.


அம்மா எங்கே போகிறாய்……? – அகில்

வீதியின் இருமருங்கும் மஞ்சள் நிறச் சருகுகள் நிறைந்து கிடந்தன. பச்சைப் பசேல் என்றிருந்த மரங்கள் எல்லாம் வசந்த காலம் முடிந்து, இலைகளை உதிர்க்கத் தொடங்கியிருந்தன. காற்றின் கரங்கள் எத்திவிளையாட காய்ந்து போன சருகுகள் திக்கிற்கு ஒன்றாய் அலைக்கழிந்து பறந்தன. 
பேத்தியின் சாமத்திய வீட்டைச் சிறப்பாக முடித்துக் கொடுத்துவிட்டு, விழாவுக்கு வந்த உறவுக்காரப் பையன் ஒருவனுடன் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள் விசாலாட்சி. 


பதவி உயர்வு…..! – அகில்

அரசாங்கம் கொடுத்த புதிய ஜீப்பில் வீட்டுக்குத் திரும்பினார் பிரிகேடியர்;; சில்வா. திறந்த ஜீப்பில் வந்த அவரைக் கண்ட ஊர் மக்கள் கை அசைத்து வரவேற்றார்கள். 
கடற்படையில்; முக்கிய பதவியில் இருக்கும் பிரிகேடியர்;; சில்வா வீடு வருவது மிகவும் குறைவுதான். இம்முறை இரண்டு நாள் விடுப்பில் வந்திருந்தார். ஜீப் சத்தம் கேட்டு வெளியே வந்த சுமனா அவரைக் கண்டதும் முகமெல்லாம் பல்லாக வரவேற்றாள். பல நாட்கள் காணாத கணவனைக் கண்ட சந்தோசத்தில் முகம் சிவந்து போனது அவளுக்கு. 


பெரிய கல்வீடு – அகில்

திடீரென்று நான் அந்தச் செய்தியைச் சொன்னதும் என் மனைவி ஒருகணம் அதிர்ந்து போனாலும், முடிவில் அரைமனத்துடன் சம்மதித்தாள். 

“நீங்க ஊருக்குப் போறதைப்பற்றி எனக்கு எந்தப் பிரச்சனையுமில்ல. ஆனால் ஒரு பிரச்சனையிலயும் மாட்டாமல் போய்வரவேணும். அதுதான் என்ர கவலை” என்றாள் மனைவி. 

மகளுக்கு யூனிவேசிட்டியில் சேரவேண்டிய நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. சுதனுக்கும் வகுப்புப் பரீட்சைகள் இருந்தன. இந்தக் காரணங்களால் சுமதி பிள்ளைகளுடன் தங்கிவிட்டாள். நான் மட்டும் தனியாக ஸ்ரீலங்காவுக்குப் போவதென்று முடிவானது. 


ரேடியோப்பெட்டி -அகில்

அப்பொழுதுதான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்திருந்தேன். மாலதி சாப்பாடு பரிமாறிவிட்டுக் குழந்தைக்கு ‘பம்பஸ்’ மாத்தவென்று உள்ளே புகுந்தவள் இன்னும் வெளியே வரவில்லை. அவள் மணக்க மணக்க சமைத்திருந்த மட்டன்கறியைச் சாப்பிட்டது, நெஞ்சுக்;குழிக்குள் பந்தை இறுகிக்கியது போல ஒரு அமுக்க உணர்வு. 
என்னதான் இருந்தாலும் மாதம் ஒருக்காவாவது மட்டன் சாப்பிடாமல் என்னால் இருக்க முடியாது.