காதல் என்பது…(குரு அரவிந்தன்)

Kathal -1'ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்து கொள்ளுதல்தான் உன்மையான
காதலா?'

நாளை உஷாவைப் பெண் பார்க்க வருகிறார்கள்.
அவள் பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லாத அரங்கேற்றம் அது. ஜானகியால் பொறுக்கமுடிய வில்லை.
‘உஷா அப்பாவிற்கு இதிலே கொஞ்சம் கூட சம்மதம் இல்லை. வேறு மதம்,
வேறு கலாச்சாரம் நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வருமா? உன்னுடைய எதிர் காலத்தைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தாயா?’ என்றாள்.
இனியும் பொறுக்க முடியாது உஷா வாயைத் திறந்தாள்.


அவளுக்கு ஒரு கடிதம்.. (குரு அரவிந்தன்)

Valentine Story – காதலர் தினக் கதை

Aval -2(‘மச்சி…….இலவு காத்த கிளி ஆகிவிடாதே!……..நீ தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வேறு யாராவது கொத்திக் கொண்டு போகத் தயாரா இருப்பாங்க…..நாளைக்குக் காதலர் தினம். சந்தர்ப்பத்தை நழுவவிடாதே! )

 அன்று காதலர் தினம். காலேஜ் இளசுகள் மனதிலே இருக்கும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் நன்நாள். சுரேஷ_ம் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான். எப்படியாவது அவளிடம் அந்த வேலன்டைன் கார்ட்டைக் கொடுத்து விடவேண்டும்


அம்மா எங்கே போகிறாய்……? – அகில்

வீதியின் இருமருங்கும் மஞ்சள் நிறச் சருகுகள் நிறைந்து கிடந்தன. பச்சைப் பசேல் என்றிருந்த மரங்கள் எல்லாம் வசந்த காலம் முடிந்து, இலைகளை உதிர்க்கத் தொடங்கியிருந்தன. காற்றின் கரங்கள் எத்திவிளையாட காய்ந்து போன சருகுகள் திக்கிற்கு ஒன்றாய் அலைக்கழிந்து பறந்தன. 
பேத்தியின் சாமத்திய வீட்டைச் சிறப்பாக முடித்துக் கொடுத்துவிட்டு, விழாவுக்கு வந்த உறவுக்காரப் பையன் ஒருவனுடன் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள் விசாலாட்சி. 


பதவி உயர்வு…..! – அகில்

அரசாங்கம் கொடுத்த புதிய ஜீப்பில் வீட்டுக்குத் திரும்பினார் பிரிகேடியர்;; சில்வா. திறந்த ஜீப்பில் வந்த அவரைக் கண்ட ஊர் மக்கள் கை அசைத்து வரவேற்றார்கள். 
கடற்படையில்; முக்கிய பதவியில் இருக்கும் பிரிகேடியர்;; சில்வா வீடு வருவது மிகவும் குறைவுதான். இம்முறை இரண்டு நாள் விடுப்பில் வந்திருந்தார். ஜீப் சத்தம் கேட்டு வெளியே வந்த சுமனா அவரைக் கண்டதும் முகமெல்லாம் பல்லாக வரவேற்றாள். பல நாட்கள் காணாத கணவனைக் கண்ட சந்தோசத்தில் முகம் சிவந்து போனது அவளுக்கு. 


பெரிய கல்வீடு – அகில்

திடீரென்று நான் அந்தச் செய்தியைச் சொன்னதும் என் மனைவி ஒருகணம் அதிர்ந்து போனாலும், முடிவில் அரைமனத்துடன் சம்மதித்தாள். 

“நீங்க ஊருக்குப் போறதைப்பற்றி எனக்கு எந்தப் பிரச்சனையுமில்ல. ஆனால் ஒரு பிரச்சனையிலயும் மாட்டாமல் போய்வரவேணும். அதுதான் என்ர கவலை” என்றாள் மனைவி. 

மகளுக்கு யூனிவேசிட்டியில் சேரவேண்டிய நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. சுதனுக்கும் வகுப்புப் பரீட்சைகள் இருந்தன. இந்தக் காரணங்களால் சுமதி பிள்ளைகளுடன் தங்கிவிட்டாள். நான் மட்டும் தனியாக ஸ்ரீலங்காவுக்குப் போவதென்று முடிவானது. 


ரேடியோப்பெட்டி -அகில்

அப்பொழுதுதான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்திருந்தேன். மாலதி சாப்பாடு பரிமாறிவிட்டுக் குழந்தைக்கு ‘பம்பஸ்’ மாத்தவென்று உள்ளே புகுந்தவள் இன்னும் வெளியே வரவில்லை. அவள் மணக்க மணக்க சமைத்திருந்த மட்டன்கறியைச் சாப்பிட்டது, நெஞ்சுக்;குழிக்குள் பந்தை இறுகிக்கியது போல ஒரு அமுக்க உணர்வு. 
என்னதான் இருந்தாலும் மாதம் ஒருக்காவாவது மட்டன் சாப்பிடாமல் என்னால் இருக்க முடியாது.


உறுத்தல் -அகில்

அன்று சனிக்கிழமை.

மதியத் தூக்கத்துக்குப் பின் எழுந்த இளங்கோ, நேராகச் சமையலறைக்கு வந்தான். மனைவி சுமதி தேனீர் தயாரித்துக்கொண்டிருந்தாள்.

“என்ன சுமதி! எல்லாம் ரெடியா?”

“நாங்க எல்லோரும் ரெடியுங்க. நீங்க தான்……”

“இன்னும் பத்து நிமி~த்தில் நான் ரெடியாயிடுவன்” சொல்லி விட்டுப் போன இளங்கோ,
சொன்னதை விட விரைவாகவே ரெடியாகி வந்தான்.


வலி…..!- அகில்

மச்சக்கறி இல்லையென்றால் மயூரனுக்குச் சாப்பாடு இறங்காது. செவ்வாய், வெள்ளி போறதே அவனுக்குப் பெரும்பாடாக இருக்கும். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் சாமினி மரக்கறிச்சாதம் செய்து, ஊறுகாய்த் துண்டொன்றும் வைத்திருந்தாள். மதிய இடைவேளையின்போது வேண்டாவெறுப்பாகச் சாப்பிட்டுவிட்டு, வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பியிருந்தான்.


வெளியில் எல்லாம் பேசலாம் -அகில்

நாட்டு நிலைமை காரணமாக சோபை இழந்து காணப்பட்ட இலக்கிய விழாக்களும், நூல் வெளியீடுகளும் மீண்டும் களைகட்டத் தொடங்கியிருந்தன. இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருந்த சிறுகதை ஒன்றில் மூழ்கியிருந்த என்னை மனைவியின் குரல் உலுக்கியது.

“என்னப்பா இருக்குறீங்க. நூல் வெளியீட்டுக்குப் போகவேணும் எண்டனீங்கள்….. என்ன வெளிக்கிட இல்லையோ?” 

“மறந்தே போயிட்டனப்பா. நல்ல காலம் ஞாபகப்படுத்தினீர்” என்றபடி சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன்.