'ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்து கொள்ளுதல்தான் உன்மையான
காதலா?'
நாளை உஷாவைப் பெண் பார்க்க வருகிறார்கள்.
அவள் பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லாத அரங்கேற்றம் அது. ஜானகியால் பொறுக்கமுடிய வில்லை.
‘உஷா அப்பாவிற்கு இதிலே கொஞ்சம் கூட சம்மதம் இல்லை. வேறு மதம்,
வேறு கலாச்சாரம் நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வருமா? உன்னுடைய எதிர் காலத்தைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தாயா?’ என்றாள்.
இனியும் பொறுக்க முடியாது உஷா வாயைத் திறந்தாள்.