கடந்த 23-08-2024 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ‘ஆக்குவாய் காப்பாய்’ திரைப்படத்தின் அறிமுக வைபவத்தில் ‘பாரதி ஆர்ட்ஸ்’ மதிவாசன் அவர்களின் அழைப்பை ஏற்று அனைவரும் அங்கு கலந்து கொண்டனர். நிகழ்வில் ஆரம்ப உரையாற்றிய மதிவாசன் அவர்கள் பின்வருமாறு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். ‘உலகில் பல நாடுகளில் வாழும் எமது தமிழ் மக்கள் மத்தியிலிருந்து தொடர்ச்சியாக பல திரைப்படங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் கனடாவிலும் அதற்கு விதி விலக்காக இருக்காமல் பல கலைஞர்கள் தொடர்ச்சியாக இந்த திரைப்படத்துறையில் இயங்கிவருகின்றார்கள்.
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான கரம்பொனைச் சேர்ந்த‘தமிழ்மகள்’ உமா குமரன்!
உலகத்தமிழர்கள் தமிழராய் பெருமை!
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் உமா குமரன். இவர் கரம்பொன் சுருவில் வீதியைப் பிறப்பிடமாகக் கொண்ட பாலசிங்கம் கமலாம்பிகை தம்பதிகளின் பேத்தியாவார். இவர் லேபர் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அந்த கட்சி பிரிட்டனில் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது.
அவர் போட்டியிட்ட தொகுதியில் மொத்தம் 54.18 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். அதில் 19,415 வாக்குகளை உமா குமரன் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கியூபிசக் கோட்பாட்டை முன்வைத்து ‘என்ன சொல்லப் போகிறாய்?’
நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுதான் ‘சூம்’ என்று சொல்லப்படுகின்ற மெய்நிகர் நிகழ்வாகும். பல்வேறு நாடுகளில் இருந்தும், பலரும் பங்கு பற்றக்கூடியதாகவும் இது அமைக்கப்பட்டிருக்கின்றது. சென்ற சனிக்கிழமை யூன் 15 ஆம் திகதி இலக்கியவெளி குழுவினர் சர்வதேச ரீதியாக இலக்கியம் சார்ந்து நடத்திய மெய் நிகர் நிகழ்வு ஒன்று இடம் பெற்றிருந்தது. கோவிட் காரணமாக வெளிவராத நூல்கள் பற்றிய திறனாய்வுகளும், கருத்துப் பரிமாற்றங்களும் கனடிய தமிழ் இலக்கியத்தின் துரித வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது.
கனடாவில் கோவிலூர் செல்வராஜனின் நூல் வெளியீடு
தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பெற்ற எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜன் அவர்களின் நூல்கள் வெளியீட்டு மற்றும் அறிமுகவிழா சென்ற மே மாதம் 25 ஆம் திகதி 2024 அன்று கனடா ஸ்காபறோ நகரில் உள்ள பைரவி நுண்கலை மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் மேற்படி விழாவிற்கு தற்போதைய தலைவரும் கவிஞருமான அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.
கனடா, ரொறன்ரோவில் கலைஞர்களுக்கு மதிப்பளிப்பு!
முத்தமிழ் என்று அழைக்கப்படுகின்ற இயல், இசை, நாடக வடிவங்களைக் கட்டிக் காப்பதில் புலம் பெயர்ந்து கனடா வந்த ஈழத்தமிழர்கள், வேலைப் பளுவுக்கு மத்தியிலும் மிகவும் ஆர்வத்தோடு அத்துறையில் ஈடுபட்டார்கள். தொடக்கத்தில் பொருளாதார ரீதியாகத் தங்களைத் தாங்களே நிலை நிறுத்திக் கொள்வதில் கஸ்டங்களை அனுபவித்தாலும், தங்களுடன் ஒன்றாக இணைந்த கலை வடிவங்களைப் புலம் பெயர்ந்த மண்ணில் வெளிக் கொண்டுவருவதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை.
கனடாவில் நடந்த ‘நூல்களின் சங்கமம்’ புத்தகக் கண்காட்சி
சென்ற சனிக்கிழமை 20-4-2024 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாகவும், உலகப்புத்தகத் தினத்தைக் கொண்டாடும் முகமாகவும் ரொறன்ரோவில் கனடியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டும், விற்பனைக்கும் கனடியத் தமிழ் எழுத்தாளர் இணையத்தால் வைக்கப்பட்டிந்தன. கனடாவின் பல பாகங்களில் இருந்தும் மிகப் பெரிய அளவில பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வுக்கு ஆதரவு நல்கினார்கள். முக்கியமாக இளையதலைமுறையினரும், சிறுவர்களும் பெற்றோருடன் வந்து கலந்து கொண்டு தமக்கு விரும்பிய நூல்களை வாங்கிச் சென்றது குறிப்பிடத் தக்கது.
கரம்பொன் ஸ்ரீ பொன் சாயி “இராம நவமி”மகா உற்சவம் – வீதி உலா 2024
கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் இராம நவமி (பாபாவின் அவதார நாள்) இன்று 19-04-2024 வெள்ளிக்கிழமை இரவு கரம்பொன் திரு வீதி ஊர்வலமும் பூசை வழிபாடும் சிறப்பாக நடைபெற்றன. பக்தர்கள் கூடி சந்தோஷமாக இந்நிகழ்வை பக்தி பூர்வமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். கரம்பொன் கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பல அரிய பணிகளைச் செய்து வரும்; ” ஸ்ரீபொன் சாயி” குழுமத்தினரையும் அத்துடன் இந்நிகழ்வை அழகுற வீடியோ ஒளிப்பதிவு செய்த “ஓம்” தொலைக்காட்சி அமைப்பினரையும் “கரம்பொன்.நெற்” இணையத்தளம் மூலம் உளமாரப் பாராட்டி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவதானியின் கவிதைகள்…!
வேறொன்றுமில்லை……✍️
உரையாடல்கள் வேண்டும்
நல்லோருடன் நல்லோர்களென தம்மை எண்ணிக் கொண்டிருப்பவர்களுடன் அசத்தலான புத்திசாலிகள்
சூட்சுமமான புத்திஜீவிகள் என….
இவர்களில் எவரிடம் எங்களை நாங்கள்
எங்ஙனம் பொருத்த முடியுமென்பதை
அறிந்து கொள்ள இவர்களுடனான
உரையாடல்கள் வேண்டும் அவர்கள்
வார்த்தைகளை உட்கொள்ள வேண்டும்
கனடாவில் செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை
செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை சித்திரை மாதம் 6ம் திகதி சனிக்கிழமை கனடா, மார்க்கத்தில் அமைந்துள்ள கலைக்கோவில் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. சலங்கைப்பூசை என்று சொல்வதைவிட, எமது இளைய தலைமுறையினருக்கு எமது பாரம்பரிய கலைகளை அறிமுகம் செய்யும் ஒரு நிகழ்வாகவே இது இருந்தது. “வளரும் பயிரை முளையிலே தெரியும்” என்பதற் கிணங்க அகவை எட்டு நிரம்பிய அதிசா தனது மூன்று வயதில் இருந்து கலைக்கோவில் நடன ஆசிரியை நாட்டியக் கலாநிதி ஸ்ரீமதி வனிதா குகேந்திரனிடம் நடனத்தைச் சாத்திர முறைப்படி கற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சொற்கோ வி.என்.மதிஅழகன்- தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு ” நூல் அறிமுக விழா
தமிழ்பேசும் நல்லுலகத்தின் புகழ்பூத்த பெரும் தமிழ் அறிவிப்பாளர் திரு வி.என்மதியழகன் அவர்களின் “சொற்கோ வி.என்.மதிஅழகன்- தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு ” நூல் அறிமுக விழா கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் ஸ்காபறோ நகரசபை மண்டபத்தில் இணையத்தின்
தலைவர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமையில் இருபத்திமூன்றாம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 01:30 மணிக்கு தமிழர்களால் நிறைந்து வழிந்த ஒன்றாக வெற்றிகரமாக
நடைபெற்றது.