sriranjani book release1b-2018ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா எழுதிய இரண்டு நூல்களின் வெளியீடும், அந்த நூல்கள் பற்றிய கலந்துரையாடலும் ஒக்ரோபர் 6ம் திகதி அன்று ஸ்காபோரோ நகரசபை மண்டபத்தில் நிகழ்ந்தது.சங்கரி விஜேந்திராவின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்த கோதை அமுதன் அவர்கள் நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கமைத்திருந்தார். அகணி சுரேஸ், மீரா பாரதி, சுடர், கெளசலா ஆகியோர் ஸ்ரீரஞ்சனியின் ‘பின் தொடரும் குரல்’ என்ற கட்டுரைத் தொகுதி பற்றிய தமது கருத்துரைகளை வழங்கினர். ஸ்ரீரஞ்சனியின் ‘உதிர்தலில்லை இனி’ என்ற சிறுகதைத் தொகுப்புப் பற்றிய தமது கருத்துரைகளை மயூ மனோ, நிரூபா, மெலிஞ்சி முத்தன், மைதிலி தயாநிதி ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியின் நிறைவில் நிகழ்வில் பங்குகொண்டோருக்கும் நிகழ்வுக்குச் சமூகமளித்திருந்தோருக்கும் நன்றி கூறிய ஸ்ரீரஞ்சனி தமிழ் வளரவும் இலக்கியம் செழிக்கவும் ஊக்கமும் ஆதரவும் வழங்கும் கரம்பொன்.நெற் உள்ளடங்கலான ஊடகங்களுக்கு தனது சிறப்பான நன்றியைத் தெரிவித்தார்.

sriranjani book release-2018

sriranjani book release3-2018

sriranjani book release2-2018