கனடாவில் நடந்த ‘நூல்களின் சங்கமம்’ புத்தகக் கண்காட்சி

சென்ற சனிக்கிழமை 20-4-2024 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாகவும், உலகப்புத்தகத் தினத்தைக் கொண்டாடும் முகமாகவும் ரொறன்ரோவில் கனடியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டும், விற்பனைக்கும் கனடியத் தமிழ் எழுத்தாளர் இணையத்தால் வைக்கப்பட்டிந்தன. கனடாவின் பல பாகங்களில் இருந்தும் மிகப் பெரிய அளவில பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வுக்கு ஆதரவு நல்கினார்கள். முக்கியமாக இளையதலைமுறையினரும், சிறுவர்களும் பெற்றோருடன் வந்து கலந்து கொண்டு தமக்கு விரும்பிய நூல்களை வாங்கிச் சென்றது குறிப்பிடத் தக்கது.


கரம்பொன் ஸ்ரீ பொன் சாயி “இராம நவமி”மகா உற்சவம் – வீதி உலா 2024

கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் இராம நவமி (பாபாவின் அவதார நாள்) இன்று 19-04-2024 வெள்ளிக்கிழமை இரவு கரம்பொன் திரு வீதி ஊர்வலமும் பூசை வழிபாடும் சிறப்பாக நடைபெற்றன. பக்தர்கள் கூடி சந்தோஷமாக இந்நிகழ்வை பக்தி பூர்வமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். கரம்பொன் கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பல அரிய பணிகளைச் செய்து வரும்; ” ஸ்ரீபொன் சாயி” குழுமத்தினரையும் அத்துடன் இந்நிகழ்வை அழகுற வீடியோ ஒளிப்பதிவு செய்த “ஓம்” தொலைக்காட்சி அமைப்பினரையும் “கரம்பொன்.நெற்” இணையத்தளம் மூலம் உளமாரப் பாராட்டி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


அவதானியின் கவிதைகள்…!

வேறொன்றுமில்லை……✍️

உரையாடல்கள் வேண்டும்
நல்லோருடன் நல்லோர்களென தம்மை எண்ணிக் கொண்டிருப்பவர்களுடன் அசத்தலான புத்திசாலிகள்
சூட்சுமமான புத்திஜீவிகள் என….

இவர்களில் எவரிடம் எங்களை நாங்கள்
எங்ஙனம் பொருத்த முடியுமென்பதை
அறிந்து கொள்ள இவர்களுடனான
உரையாடல்கள் வேண்டும் அவர்கள்
வார்த்தைகளை உட்கொள்ள வேண்டும்


யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் Annual Gala Dinner-2024

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த இராப்போசன ஒன்று கூடல் விழா (Annual Gala Dinner-2024) ஸ்காபுரோவில் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் 05-04-2024 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா வாழ் நலன் விரும்பிகள் அனைவரும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


கனடாவில் செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை

செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை சித்திரை மாதம் 6ம் திகதி சனிக்கிழமை கனடா, மார்க்கத்தில் அமைந்துள்ள கலைக்கோவில் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. சலங்கைப்பூசை என்று சொல்வதைவிட, எமது இளைய தலைமுறையினருக்கு எமது பாரம்பரிய கலைகளை அறிமுகம் செய்யும் ஒரு நிகழ்வாகவே இது இருந்தது.  “வளரும் பயிரை முளையிலே தெரியும்” என்பதற் கிணங்க  அகவை எட்டு நிரம்பிய அதிசா தனது மூன்று வயதில் இருந்து கலைக்கோவில் நடன ஆசிரியை நாட்டியக் கலாநிதி ஸ்ரீமதி வனிதா குகேந்திரனிடம் நடனத்தைச் சாத்திர முறைப்படி கற்று வருவது குறிப்பிடத்தக்கது.


சொற்கோ வி.என்.மதிஅழகன்- தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு ” நூல் அறிமுக விழா

தமிழ்பேசும் நல்லுலகத்தின் புகழ்பூத்த பெரும் தமிழ் அறிவிப்பாளர் திரு வி.என்மதியழகன் அவர்களின் “சொற்கோ வி.என்.மதிஅழகன்- தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு ” நூல் அறிமுக விழா கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் ஸ்காபறோ நகரசபை மண்டபத்தில் இணையத்தின்
தலைவர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமையில் இருபத்திமூன்றாம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 01:30 மணிக்கு தமிழர்களால் நிறைந்து வழிந்த ஒன்றாக வெற்றிகரமாக
நடைபெற்றது.


கவிஞர் வி. கந்தவனம் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்குப் பேரிழப்பாகும்.


கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்கு, குறிப்பாகக் கனடிய மக்களுக்குப் பேரிழப்பாகும். காங்கேசந்துறையில் நடக்கும் இலக்கிய விழாக்களில், மாணவப்பருவத்தில் குறிப்பாகப் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவற்றில் கவிஞரைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் இங்கே கனடாவில் அதிபர் பொ. கனகசபாபதி வீட்டில்தான் இவரை முதலில் சந்தித்தேன். உதயன் சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கம் கிடைத்தபோது என்னை அழைத்து வாழ்த்தியிருந்தார். அதன்பின் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக எனக்கு ஒரு பதவியையும் பெற்றுத் தந்தார். அதன் பின்தான் வரவேற்புரையோ அல்லது நன்றியுரையோ மேடையில் ஏறிச் சொல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.


ஈழத்து கலைஞர்களின் படைப்பில் உருவான “டக் டிக் டோஸ்”

கடந்த வாரம் கனடா ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள WOODSIDE CINEMA திரையரங்கில் எமது கலைஞர்களின் படைப்பில் உருவான ” டக் டிக் டோஸ்” திரைப்படம் மதியம் 1.00 மணிக்கு பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டது. நிகழ்வில் திரையரங்கின் ஆசனங்கள் முழுவதும் பார்வையாளர்களால் நிறைந்து காணப்பட்டது ஈழத்து கலைஞர்களின் படைப்பை ஊக்குவிப்பதற்கான கனடா வாழ் தமிழ் மக்களின் பேராதரவாகும். நிகழ்வில் “புத்திகெட்ட மனிதர் எல்லாம்” படத்தில் சைந்தவி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்த சிந்துஜா அவர்கள் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு தனது அனுபவங்களை வழங்கியிருந்தார்.


ஆசை வெட்கமறியாதோ..? Valentine Story

(நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள்.

ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது,
மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது.
சரியா பிழையா தெரியவில்லை. )

ழுபது கிலே மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள். இப்படியான முகஅலங்காரங்களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் செய்வது வழக்கம். 


உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில்!

உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகள் பட்டியலை தற்போது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ளது.

உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது என்று கேட்டால் பலரும் அமெரிக்கா, இங்கிலாந்து என பதிலளிப்பார்கள்.

ஆனால் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் பின்னுக்கு தள்ளி பல நாடுகள் கல்வி அறிவில் முன்னிலை வகிக்கின்றன.