கனடாவில் கடந்த பல ஆண்டுளாக வெற்றிகரமாக இயங்கிவரும் சலங்கோதயம் நடனப் பள்ளியின் 30வது ஆண்டுவிழா நடன நிகழ்வுகள் அண்மையில் ஸ்காபுறோ சீனக் கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.சங்கீத மேதை அருண் கோபிநாத் அவர்களின்; இனிய குரல் வளத்துடன் கூடிய பாடல்களும், வயிலின் வித்துவான் திரு.ஏ. ஜெயதேவன் ஆகியோரது பக்க வாத்திய இன்னிசைகளும் நாட்டிய நிகழ்வுகளுக்கு மெருகூட்டின.
எமது பாராளுமன்ற திரு ஹரி ஆனந்தசங்கரி மற்றும் சாமி அப்பாத்துரை ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர் நிர்மலா சுரேiஸின் 30 வருட சேவையைப் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.