தமிழிசைக் கலாமன்றத்தின் தைப்பொங்கல் விழா இன்று தைமாதம் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் தமிழிசைக் கலாமன்றத்தின் தமிழ் கலை அரங்கத்தில் ரொறரோன்வின் முன்னனி நாட்டிய ஆசிரியர்களின் மாணவர்களால் பல்வேறு வகையில் அமைந்த நாட்டிய நிகழ்வுகளும் அத்துடன் புகழ் பூத்த மிருதங்க ஆசிரியர் கிரிதரன் அவர்களின் நெறியாள்கையில் வயலின் இசைக் கச்சேரியும் சேர்ந்த கலைச்சங்கமமாக மன்றத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான திரு.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.