கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் இன்று 17-08-2019 ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா ஆயிரக்கணக்கான ஐயப்பன் பக்தர்கள் புடைசூழ இனிதே நடந்தேறியது. அதிகாலை அபிசேகத்துடன் பூசைகள் ஆரம்பமாகி வசந்தமண்டப பூசையை தொடர்ந்து ஐயப்பன், விநாயகப் பெருமான், சுப்பிரமணியப்பெருமான் சகிதம் உள்வீதி வலம் வந்து காலை 09.30 மணிக்கு தேரில் ஆரோகணித்தார்.
அதனைத்தொடர்ந்து முத்தேர் பவனி இடம்பெற்று தேர் இருப்பிடத்தை அடைந்ததும் அர்ச்சனைகள் இடம்பெற்று தொடர்ந்து பச்சை சாற்றி தேரில் இருந்து இறங்கும் நிகழ்வும் தொடர்ந்து நவசக்தி அர்ச்சனையும் அதனைத் தொடர்ந்து பிராய்ச்சித்த அபிஷேகத்துடன் தேர் திருவிழா இனிதே நிறைவுற்றது.