நல்லை நகர் நாவலர்
நலங்கள் பல பெற்றவர்
சொல்லில் வாக்கு வன்மையில்
சுடரெனவே விளங்கினார்
சைவமதம் தமிழ்மொழி
தழைக்க வேண்டி நாளுமே
சமய நெறிகள் போற்றினார்
தமிழில் நூல்கள் இயற்றினார்
மக்கள் சுகாதாரமும்
மன அமைதியும் பெற்று
தக்கபடி வாழவே
சைவ நெறியைப் பரப்பினார்
ஈழத்தமிழ் நாடு தான்
ஈன்றெடுத்த நாவலர்
இந்தியத் தென்னாட்டிலும்
இசையுடனே விளங்கினார்
பள்ளிக்கூடம் நிறுவினார்
பாலர் கல்வி போற்றினார்
பைபிள் தமிழில் தந்துமே
பல நெறிகள் காட்டினார்
அச்சுக் கோவை யந்திரம்
அமைத்துப் பல நூல்களை
அழிந்திடாமல் காத்திட்ட
அவர் பெயரைப் போற்றுவோம்
நாவினிக்கப் பாடுவோம்
நாவலர் தம் புகழினை
நாங்கள் சிறு பாலர்கள்
நாவலரை வாழ்த்துவோம்.