திரு பேரம்பலம் ஜெகதீஸ்வரன்
(பால் பண்ணை முகாமையாளர்)
அன்னையின் மடியில் 28-03-1956
ஆண்டவன் அடியில் 11-08-2015
அம்பாறை தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், மற்றும் கரம்பனை வாழ்விடமாகவும் கொண்ட பேரம்பலம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 11-08-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காரைநகர் சிவன் கோவில்(ஈழத்துச் சிதம்பரம்) மணியக்காரர் பரம்பரையைச் சேரந்த காலஞ்சென்ற பேரம்பலம்(அதிபர்- தம்பிலுவில்), மங்கையர்க்கரசி தம்பதிகளின் கனிஷ்டப் புத்திரரும், காலஞ்சென்ற இராசையா, ருக்மணிதேவி(கரம்பன்) தம்பதிகளின் மூத்த மருமகனும்,
மஞ்சுளாதேவி(தம்பிலுவில்) அவர்களின் அன்புக் கணவரும்,
ராம்கௌரியன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
இராஜாம்பிகை(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற இராஜேஸ்வரன், ஜெகதாம்பிகை(கனடா), அமிர்தாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவபாதசிங்கம், வாமதேவன், ஜெயகுமார், ஜெயந்தி ராஜேஸ்வரன், மகிந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வனஜா, மயூரதி, குகப்பிரியன், கேசவா, ஜெகாயினி, தாட்ஷாயினி, ஆரணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேந்திரன், மதிதேவி, காலஞ்சென்றவர்களான மனோகரன், மதியழகன் ஆகியோரின் அன்பு அத்தானும்,
கருணேஸ்வரன், சியாமளா(கனடா), குமுதினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கௌரிஷா, கௌரிஷன், கௌஷினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஆரியா, சேயோன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அம்பாறை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல:02,
பிரதான வீதி,
தம்பிலுவில்,
அம்பாறை.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: ராம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94785457136
"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் கரம்பொன் நெட் இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்