annai-bookகரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையின் ஒருங்கிணைப்பாளராக அங்கிருந்து செயற்பட்டு வரும் திரு. செவ்வேள் விஜிதரன் இள வயதில் தனது தாய், தந்தையை இழந்த நிலையில் இளம் பராயத்திலேயே படிப்பை தொடர முடியாமல் குடும்ப சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தக சாலையில் முதலில் விற்பனையாளனாக பணியைத் தொடர்ந்தார். பின்னர் தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியினாலும் முதலாளியின் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாகி சிறப்பான முறையில் பல வருடங்கள் புத்கசாலையை தனது தலைமையில் திறம்பட நிர்வகித்து வந்தார்.

இவரின் தொழில் திறமையை அவதானித்த உரிமையாளர் விஜிதரனின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு இவரை சொந்தமாக தொழில் ஆரம்பிக்க ஆசி வழங்கினார். இப்பொழுது யாழ்ப்பாணத்தில் தனது தாயின் நினைவாக அன்னை புத்தகசாலையை ஆரம்பித்து நல்ல முறையில் நடாத்தி வருகிறார். அதே நேரம் தான் படித்த கரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலய மாணவர்களுக்கு வேண்டிய பாடசாலை உபகரணங்களை இலவசமாக வழங்கி தன்னால் முடிந்தவரை உதவி வருகிறார். விஜிதரன் வாழ்வில் மேன்மேலும் சிறந்து விளங்க அவரை வாழ்த்துகிறோம். 

annai-book1