saibabaமார்க்கம் ஸ்ரீ சத்ய சாயி நிலையத்தினர் கொண்டாடிய சாயி பாபாவின் 89வது ஜெயந்தி  தினம்
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை 23-11-2014 மாலை 5.30 மணியளவில் மார்க்கத்திலுள்ள Armadale Community Centre இல் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் 89வது ஜெயந்தி தினம் மார்க்கம் ஸ்ரீ சத்ய சாயி நிலையத்தினரால் பக்தி பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் புல்லாங்குழலிசை,நடனம், ஆன்மீகவுரை, பஜனைகளுடன் ஊஞ்சல் மற்றும் மங்கள ஆரத்தியும் இடம்பெற்றன. அத்துடன் பக்தர்களுக்கு பிரசாதத்துடன் உணவும் வழங்கப்பட்டது.

இச் சாயி சேவா நிலையம் கடந்த 15 வருடங்களாக மாதம் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் இளம் சிறார்களுக்காக சமய வகுப்புகளையும், முதியோர்களுக்காக பஜனைகளையும் தொடர்ந்து நடாத்தி சேவையாகச் செய்து வருகிறார்கள். அத்துடன் பகவான் சாயிபாபாவின் பிறந்த நாளையும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். இந்த சேவையினை தென்கரம்பனைச் சேர்ந்த ஜெகமோகன் சாந்தினி தம்பதிகளுடன் வரதராசன், ஜெயமுரளி இன்னும் பல நண்பர்களும் சேர்ந்து நடாத்தி வருகிறார்கள். ஒவ்வொரு வருடத்திலும் வருடப்பிறப்பு, நத்தார் பண்டிகை, மகாசிவராத்திரி இன்னும் விசேட தினங்களில் சமய கலை நிகழ்வுகளுடன் பஜனைகளும் நடைபெற்று வருகிறது.

நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் சிலவற்றைக் கீழே காண்கிறீர்கள்.