உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை நடாத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான 10வது பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி யுpசடை மாதம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் பிரான்ஸ் நாட்டில் Argentan நகரில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா, டென்மார்க், நோர்வே, அமெரிக்கா, பெல்ஜியம், சுவீடன், அவுஸ்திரேலியா, அயர்லாந்து, போத்துக்கல், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய 16ற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 276 போட்டியாளர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள்.

பிரான்ஸ் நாட்டின் Argentan நகரின் உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை ஏற்பாடு செய்திருந்த மாபெரும் பூப்பந்தாட்ட போட்டி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இப்போட்டிகள் இந்த மாதம் 19, 20 ஆம் திகதிகளில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
ஆரம்ப நிகழ்வாக அமைதி வணக்கம், செலுத்தப்பட்டு அகளங்கனினால் தமிழ்த்தாய் வாழ்த்து, பிரான்ஸ் தேசிய கீதம் மங்களவிளக்கேற்றல் என சம்பிரதாய நிகழ்வுகள் நடைபெற்றன.

பிரதம விருந்தினர்
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் Argentan நகர மேயர் திரு FREDERIC LÉVEILLÉனும், துணை மேயர் YANNICK JOUADEடும் கலந்துக்கொண்டிருந்தனர்.

தொடர்ச்சியாக உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் தலைவர் ஜெகதரன் கதிர்வேலனும், அதன் ஸ்தாபகர் கந்தையா சிங்கமும் உரையாற்றி இருந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் பிரதம நடுவர் Roman Pechous போட்டி நிபந்தனைகளை அறிவித்த பின்னர் போட்டி ஆரம்பமானது.
போட்டிகள் 3 வெவ்வேறு மைதானங்களில் நடைபெற்றுள்ளது.

276ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்
இந்த போட்டிகளுக்கு வழமை போன்று இந்தியா, மலேசியா, அமெரிக்கா, கனடா, டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ், சுவிஸ், அயர்லாந்து, நோர்வே, ஜப்பான், சுவீடன், பெல்ஜியம், பின்லாந்து, பிரித்தானியா நாடுகளில் பரந்து வாழும் எமது வீரர்கள் வருகை தந்து கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

16 நாடுகளில் இருந்து 276ற்க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் 27 பிரிவுகளில் ஆண் பெண்கள் என இரு பாலாரும் கலந்து கொள்ளும் வகையில் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அத்துடன் தேசிய, சர்வதேச தர பட்டியல் வீர வீராங்கனைகள் அதிகம் கலந்துகொண்டுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழர் அல்லாதார் கலந்து கொள்வதற்காக சர்வதேச போட்டி ஒன்றையும் ஒழுங்கமைத்த நிலையில், அதில் சகோதர இன சிங்களப் போட்டியாளர் ஒருவரும் கலந்துக்கொண்டிருந்ததாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

————————————————————————————————————–

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் நிறுவனர் திரு. கந்தையா சிங்கம்
அவர்களின் வாழ்த்துச் செய்தி!

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை (World Tamil Badminton
Federation) 10வது போட்டியை பிரான்சில் நடத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இது எமது அமைப்பின் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். கடந்த போட்டிகளில் இருந்து நாம் அடைந்த அனுபவங்கள், எமது முன்னேற்றத்திற்கு வலுச்சேர்த்துள்ளன. இம்முறை, பிரான்சில் நடக்கும் 10வது போட்டி, தமிழர் கலை, விளையாட்டு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும். போட்டியின் ஒரு பகுதியாக, 10வது மலரை வெளியிடுவது மேலும் மகிழ்வளிக்கின்றது.

இது இறகுப்பந்து விளையாட்டின் மேன்மையை உலகளவில் உயர்த்துவதோடு, தமிழ் மக்களின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும். விளையாட்டின் மூலம் ஒற்றுமையை மேம்படுத்துவதும், வீ ர வீராங்கனைகளின் திறமைகளை வெளிக்கொணருவதும் எமது
நோக்கமாகும். உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை, உலகளவில் இளம் ஒலிம்பிக் வீரர்களாக உருவாகவும், அவர்களுக்கான சர்வதேச தளங்களை வழங்கவும்
தொடர்ந்து பாடுபடுகிறது.

எமது செயற்பாடுகள், விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும், தமிழ்
இளைஞர்களின் திறன்களை உலக அரங்கில் வெளிப்படுத்தவும் உதவுகின்றன. இந்த அமைப்பு எவ்வித அரசியல் சார்பும் இல்லாமல், இலாப நோக்கமின்றி விளையாட்டுக்காக மட்டுமே செயற்பட்டு வருகின்றது என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். “விளையாட்டின் மூலம் ஒன்றிணைவோம்,
விளையாட்டுக்காக ஒன்றிணைவோம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயற்பட்டு வரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
10வது போட்டியை சிறப்பாக நடத்த உழைக்கும் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 10வது போட்டிக் குழுவினருக்கும், இந்த முயற்சியில் எப்போதும் துணை நிற்கும். முக்கியமாக நண்பர் திரு Roman Pechous (Switzerland) அவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றி.

சென்ற ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 9வது போட்டி, மிகச் சிறப்பாக அனைவராலும்
பாராட்டப்பட்ட, வராலாற்று நிகழ்வாகவும் பல சாதனைகளை கொண்ட நிகழ்வாகவும்
அமைத்திருந்தது போன்று, 10வது போட்டியும் நடைபெறும் எனவும் நம்புகின்றேன்.
இந்தப் போட்டிக்கு பக்கத்துணையாக Argentanபாட்மிண்டன் கழகம் மற்றும் Argentan நகராட்சி மன்றம் அதன் மேயர் M .Frederic LÉVEILLÉ அவர்களும் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கிய அவர்களுக்கு, எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிரான்ல் Argentan நகரில் போட்டியை நடத்த அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கும், அத்துடன் அனுசரணை வழங்கிய அனைத்து நிறுவனங்களுக்கும், ஆதரவளித்த அனைத்து மக்களுக்கும், மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றியும், பாராட்டுக்களும். போட்டியில் பங்குபற்றும் வீர, வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
WTBFஅமைப்பின் வளர்ச்சி தொடர, மேலும் பல சாதனைகள் பதிவாக என் மனமார்ந்த
வாழ்த்துக்கள்!

அன்புடன்,
கந்தையா சிங்கம்
உலகத் தமிழர் பூப்பந்தாட்ட
பேரவையின் நிறுவனர்