மரண அறிவித்தல்: திரு. அருளானந்தம் சண்முகானந்தம்

அன்னையின் மடியில் 18-10-1951
ஆண்டவன் அடியில் 24-03-2026

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Humberg, Wenden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் சண்முகானந்தம் அவர்கள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் இறைபதம் அடைந்தார்.

காலஞ்சென்றவர்களான அருளானந்தம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கரம்பொன் கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்வமணியின் ஆருயிர் கணவனும்,

தர்மிலா(முனைவர்(PhD), தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Link for the funeral:


மரண அறிவித்தல்: திருமதி. செல்வமணி (மணி) சண்முகானந்தம்

அன்னையின் மடியில் 18-09-1950
ஆண்டவன் அடியில் 21-03-2026

யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட செல்வமணி (மணி) சண்முகானந்தம் அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான அருளானந்தம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகானந்தம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தர்மிளா, தீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,


கனடா ‘கந்தர்மடம் மக்கள் ஒன்றியம்” நடத்திய குளிர்கால ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது!

கனடாவில் கடந்த பல வருடங்களாக ஒவ்வொரு வருடமும் தவறாது தங்கள் ஒன்றுகூடல்கள் மற்றும் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்திவரும்’ கந்தர்மடம் மக்கள் ஒன்றியம்’ நடத்திய குளிர்கால 2026ம் ஆண்டுக்கு உரிய ஒன்றுகூடல் கடந்த 7ம் திகதி சனிக்கிழமையன்று ஸ்காபுறோ எஸ்டேட் பேங்குவற் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது!


மருத்துவ பீடத்தை சேர்ந்த நற்குணம் அபிராமி என்ற மாணவி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Screenshot

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவானது ஆரம்பமாகியுள்ளது.

இன்றையதினம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை சேர்ந்த நற்குணம் அபிராமி என்ற மாணவி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக வரலாற்றில் மருத்துவ பீடத்திலிருந்து ஒருவரே எட்டு தங்க பதங்கங்களை பெற்ற இந்த விடயமானது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.


அனைவருக்கும் (Happy New Year 2026) இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

2025-ஆம் ஆண்டின் நினைவுகளுடன் 2026-ஆம் ஆண்டை இனிதே வரவேற்போம். பிறந்துள்ள இந்தப் புத்தாண்டு, நம் அனைவருக்கும் முன்னேற்றத்தையும், வெற்றியையும், மன அமைதியையும் தரும் ஆண்டாக அமைய மனதார வாழ்த்துகிறேன்.


13வது ஆண்டு விழாவும், விருதுகள் வழங்கும் விழாவும் “வர்த்தக தீபம் -2025”

இவ்வருடத்தின் இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் கனடா நடத்திய தனது 13வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை 27-12-2025 அன்று கனடா ஸ்காபுறோ கொன்வென்சன் விழா மண்டபத்தில் நடைபெற்றது. விருதுகள் வழங்குவதினூடாக சமூக நோக்கம் கொண்ட தனது பாதையில் தொடர்ந்தும் செயற்படுவதை கண்கூடாக காண முடிந்தது என்ற திருப்தியும் விழாவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் தோன்றியது.


பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 100வது ஜெயந்தி தினம்

கனடா மார்க்கம் மற்றும் ஸ்காபுறோ சத்ய சாயி நிலையத்தினர் கொண்டாடிய பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 100வது ஜெயந்தி தினம் இன்று நவம்பர் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலையும், மாலையும் 5321 Fich Ave East இல் அமைந்துள்ள Sri Sathya Sai Mandir இல் பக்தி பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் ஆன்மீகவுரை, பஜனைகளுடன் ஊஞ்சல் மற்றும் மங்கள ஆரத்தியும் இடம்பெற்றன. அத்துடன் பக்தர்களுக்கு பிரசாதத்துடன் உணவும் வழங்கப்பட்டது.


கனடாவில் க.பாலேந்திராவின் நூல் அறிமுகமும்,அரங்க நினைவலைகள் நிகழ்வும்!

உலகின் பல பாகங்களில் நாடக நிகழ்வுகளை நடத்தி வரும், லண்டனைத் தளமாகக் கொண்ட தமிழ் நாடக நெறியாளர் க.பாலேந்திராவின் ‘பிரத்தியேகக் காட்சி ஏழு நாடகங்களும் பதிவுகளும’ நூல் அறிமுகமும் அரங்க நினைவலைகள் நிகழ்வும், 02.11.2025 அன்று மாலை 3:00 மணி அளவில் Agincourt Community Centreஇல் நடைபெற்றது. கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் ப.ஸ்ரீஸ்கந்தன் தலைமை வகித்தார்.


Elson Badminton Club நடாத்திய 30வது வருடாந்த Gala 2025!

கனடாவில் இயங்கிவரும் Elson Badminton Club நடாத்திய 31வது வருடாந்த இராப்போசன விருந்து நவம்பர் 1ம் திகதி சனிக்கிழமை மாலை மார்க்கத்தில் அமைந்துள்ள ‘” New Jaasmin Banquet Hall ” மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.


யாழ் இந்துக்கல்லூரிக் கனடாக் கிளையினரின் கலையரசி விழா-2025

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் கலை மரபுரிமைக் கழக உபகுழு ஒருங்கிணைக்கும் வருடாந்த நிகழ்வான கலையரசி விழா-2025 ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 12, 2025, இல் அமைந்துள்ள Flato Markham Theatre மண்டபம் நிறைந்த பார்வையாளர்களின் மத்தியில் வெகுசிறப்பாக நடைபெற்றது.